பிரதமர் நரேந்​திர மோடி | கோப்புப்படம்

 
தமிழகம்

சென்னையில் 23-ம் தேதி பிரம்மாண்ட மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்

தே.ஜ.கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்​னை​யில் 23-ம் தேதி பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்​படும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கி​றார். மேலும் கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​களும் பங்​கேற்​கின்​ற​னர். இந்த மாநாட்டை சென்னை புறநகர் பகு​தி​களில் நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான அரசி​யல் களம் அனல் பறக்​கத் தொடங்​கி​யுள்​ளது. இதன் ஒருபகு​தி​யாக, பிரதமர் நரேந்​திர மோடி வரும் ஜன.23-ம் தேதி தமி​ழ​கம் வருகை தரும் நிகழ்​வில் முக்​கிய மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

முதலில் மதுரை​யில் நடத்​தத் திட்​ட​மிடப்​பட்​டிருந்த தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டம், தற்​போது சென்​னைக்கு மாற்​றப்​பட்டு மாநா​டாக நடத்​தப்​பட​வுள்​ளது. சென்​னை​யில் இம்​மா​நாட்டை நடத்​தி​னால், அது மாநிலம் முழு​வதும் மிகப்​பெரிய அரசி​யல் எழுச்​சி​யை​யும் தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​தும் என பாஜக மேலிடம் கருது​வதே இந்த மாற்​றத்​துக்​கான காரண​மாகச் சொல்​லப்​படு​கிறது. இந்த சென்னை மாநாட்டை வெறும் அரசி​யல் நிகழ்​வாக மட்​டுமல்​லாமல், கூட்​ட​ணி​யின் பலத்தை நிரூபிக்​கும் மேடை​யாக​வும் அமைக்க கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​கள் திட்​ட​மிட்​டுள்​ளனர். இதன்​படி அதி​முக, பாமக மற்​றும் பிற கூட்​ட​ணிக் கட்​சித் தலை​வர்​கள் பிரதமருடன் ஒரே மேடை​யில் பங்​கேற்​கின்​ற​னர்.

பிரதமரின் வரு​கைக்கு முன்பே தொகு​திப் பங்​கீடு மற்​றும் கூட்​ட​ணிக் கணக்​கு​களை இறுதி செய்ய பாஜக மற்​றும் அதி​முக தலைமை தீவிர​மாக ஈடு​பட்டு வரும் நிலை​யில், சென்​னை​யில் மாநாட்டை எங்கு நடத்​தலாம் என்​பது குறித்து பாஜக மாநில நிர்​வாகி​கள் நேற்று அவசர ஆலோ​சனை நடத்​தினர். குறிப்​பாக, பொதுக்​கூட்​டத்தை வெட்​ட​வெளி​யில் நடத்​தலாமா அல்​லது தனி​யார் கல்​லூரி​யின் பிர​மாண்ட உள்​ளரங்​கில் நடத்​தலாமா என்​பது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. அந்​தவகை​யில், கிழக்கு கடற்​கரை சாலை​யில் உள்ள மாமல்​லபுரம், பழைய மகாபலிபுரம் சாலை, ஜி.எஸ்​.டி.​சாலை, செங்​கல்​பட்​டு, பூந்​தமல்லி ஆகிய பகு​தி​களில் பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அதி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி, பாஜக அமைப்பு பொதுச் செய​லா​ளர் கேசவ விநாயகன், மாநில செய​லா​ளர் வினோஜ் பி.செல்​வம் உள்​ளிட்​டோர் நேற்று ஆய்வு செய்​தனர். இன்​னும் ஓரிரு நாட்​களில் மோடி பங்​கேற்​கும் மாநாட்டை நடத்த எந்த இடம் வசதி​யாக இருக்​கும் என்​பது முடிவு செய்​யப்​பட்​டு, அறிவிக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இடத்தை இறுதி செய்த பிறகு, விரை​வில் காவல்​துறை​யிடம் பாது​காப்பு அனு​மதி கோரப்பட உள்​ளது. பிரதமரின் வரு​கையை முன்​னிட்டு சென்​னை​யில் ஐந்​தடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட​வுள்​ளன. தேர்​தல் நெருங்​கும் சூழலில், பிரதமரின் இந்த சென்னை வருகை தமிழக அரசி​யலில் திருப்​பு​முனை​யாக அமை​யும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT