மதுரை: இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு சார்பில் செய்தி சேனல்கள் தொடங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் மணி நகரத்தைச் சேர்ந்த விஜய பாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் 766 மாவட்டங்களிலும் மத்திய அரசின் செய்தி சேனல்கள் தொடங்க மத்திய அரசு உரிய கொள்கை முடிவெடுக்கவும், ஊடகங்களின் விதிமீறல்ககளுக்காக ஊடக சட்டத்தில் தேவையான திருத்தம் மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.8-க்கு தள்ளிவைத்தனர்.