தமிழகம்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்; விதிகளை வகுக்க கோரி வழக்கு: 8 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: உறு​தி​யளிக்​கப்​பட்ட ஒய்​வூ​திய திட்​டத்தை உடனடி​யாக அமல்​படுத்​தும் வகை​யில் தேவை​யான விதி​களை வகுக்​கக் கோரி தொடரப்​பட்ட வழக்​கில், தமிழக அரசு 8 வார காலத்​துக்​குள் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது.

தமிழகத்​தில் அரசு ஊழியர்​களுக்​கான புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்வூதிய திட்​டத்தை தமிழக அரசு அறி​வித்​தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என அறி​வி்க்​கப்​பட்ட இந்த திட்​டத்தை அமல்​படுத்​தும் வகை​யில் தேவை​யான விதி​கள் மற்​றும் செயல்​பாட்டு நெறி​முறை​களை வகுக்​கக் கோரி தமிழ்​நாடு பழைய ஓய்​வூ​திய திட்ட மீட்பு இயக்​கத்​தின் மாநில ஒருங்​கிணைப்​பாள​ரான நந்​தகோ​பால் உள்​ளிட்ட மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர்​கள் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தனர்.

அதில், உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டப்​படி பழைய பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் அமலுக்கு வந்த பிறகு பணி​யில் சேர்ந்து 2026-ம் ஆண்​டுக்கு முன்​பாக ஓய்வு பெற்​றவர்​கள் சிறப்பு கருணை ஓய்​வூ​தி​யம் பெற தகு​தி​யுடைவர்​கள் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், உறு​தி​யளி்க்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த இது​வரை எந்​தவொரு விதி​களும் வகுக்​கப்​பட​வில்​லை. இதனால் 2026-க்கு முன்​பாக ஓய்வு பெற்​றவர்​கள் கருணை அடிப்​படையி​லான ஓய்​வூ​திய பலன்​களை பெற முடி​யாது.

எனவே, உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்தை ஏற்​கெனவே அறி​வித்​த​படி 2026 ஜனவரி முதல் அமல்​படுத்த தேவை​யான விதி​கள் மற்​றும் நெறி​முறை​களை வகுக்க தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்’ என கோரப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இதுதொடர்​பாக தமிழக அரசு 8 வாரங்​களுக்​குள் பதிலளிக்க உத்​தர​விட்​டு, விசா​ரணையை தள்​ளி​வைத்​துள்​ளார்.

SCROLL FOR NEXT