பெரியகருப்பன்

 
தமிழகம்

திருப்பத்தூரில் ​ஒரு ஓட்டில் தோற்ற பெரியகருப்பன்: முழு விவரம்

அதி​காலை வரை நீடித்த வாக்கு எண்​ணிக்​கை​யால் பரபரப்பு

செய்திப்பிரிவு

காரைக்​குடி: திருப்​பத்​தூரில் ஒரு வாக்குவித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தோல்வியடைந்தார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகு​தி​யில் வாக்கு எண்ணிக்கையின்போது 4 வாக்​குச்​சாவடிகளின் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் பழுதடைந்​தன. ஒரு இயந்​திரத்தை மட்​டுமே பொறி​யாளர்​கள் சரி செய்​தனர். மூன்​றைப் பழுதுநீக்க முடியாததால் அவை தனியாக எடுத்து வைக்​கப்​பட்​டன.

27-வது சுற்​று முதல் திமுக வேட்​பாளர் கே.ஆர்​.பெரியகருப்​பனும் தவெக வேட்​பாளர் சீனி​வாசசேதுபதியும் மாறி மாறி முன்​னிலை வகித்தனர். பழுதடைந்த வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் உள்ள வாக்​கு​களை​விட, வித்​தி​யாசம் குறை​வாக இருந் தது. இதனால், பழுதடைந்த இயந்​திரங்​களுக்​குரிய வி.​வி.​பாட்​ வாக்​குச்​சீட்​டு​கள் எண்ணப்பட்டன. இதில் கேஆர்​.பெரியகருப்​பன் 83,374 வாக்​கு​கள், சீனி​வாச சேதுபதி 83,375 வாக்​கு​கள் பெற்​றனர். இதில் 1 வாக்​கு​வித்​தியாசத்​தில் தவெக வேட்​பாளர் வெற்றி பெற்​றார்.

இதனால் மறு​எண்​ணிக்கை நடத்த திமுக தரப்பில் கோரப்​பட்டது. அதை அதி​காரி​கள் ஏற்கவில்லை.இதனால் இரு தரப்பிலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் செல்​லாத வாக்​கு​களை அதிகாரிகள் மறுஆய்வு செய்தனர். இ​தில், செல்​லத்​தக்க வாக்​கு​கள் எது​வும் இல்லை என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்து தவெக ஒரு வாக்கு வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​ற​தாக தேர்​தல் நடத்​தும் அலு​வலர் சிவ​பாலன் அறி​வித்​தார். இதனால் அதி​காலை 1.15 மணி வரை பரபரப்பு நீடித்தது.

SCROLL FOR NEXT