தமிழகம்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே கூடுதலாக 45 ரயில் சேவை குறைப்பால் பயணிகள் கடும் அவதி

விரைந்து தீர்வுகாண ரயில்வேக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கடற்​கரை - செங்​கல்​பட்டு தடத்​தில் ரயில் சேவை மாற்​றத்​தால், கடும் சிரமத்தை சந்​தித்து வரும் நிலை​யில், மேலும் 45 ரயில் சேவை​கள் குறைக்​கப்​பட்​ட​தால் பயணி​கள் மிக​வும் அவதிப்​பட்​டனர். சென்னை எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி​யின் ஒரு பகு​தி​யாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்​பால அடித்​தளப் பணி​கள் நடை​பெறுகின்​றன.

இதனால், கடற்​கரை - செங்​கல்​பட்டு தடத்​தில் பிப்​.20-ம் தேதி முதல் ஏப்​.5-ம் தேதி வரை 44 மின்​சார ரயில்​களின் சேவை​ரத்து மற்​றும் சேவை​கள் மாற்றி அறிவிக்​கப்​பட்​டன.

          

அதைத் தொடர்ந்​து, எழும்​பூர் ரயில் நிலைய 5, 6-வது நடைமேடைகள் வழி​யாக மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. நடைமேடைகள் மாற்​றப்​பட்​ட​தால், இரு​மார்க்​கத்​தி​லும் மின்​சார ரயில்​கள் தாமத​மாகின்​றன.

இதனால் கடந்த 4 நாட்​களாகவே பயணிகள் சிரமம் அடைந்து வரு​கின்​றனர். நேற்று 5-வது நாளாக ஏற்​பட்ட மின்​சார ரயில்​கள் தாமதத்​தால் பெரும்​பாலான பயணிகள் திரிசூலம், பரங்​கிமலை, கிண்டி உள்​ளிட்ட ரயில் நிலை​யங்​களில் இறங்​கி, அரு​கில் உள்ள மெட்ரோ நிலை​யம் சென்​று, மெட்ரோ ரயில்​களில் பயணித்​தனர்.

இதனால், மெட்ரோ ரயில்​களில் பயணிகள் கூட்​டம் அலைமோ​தி​யது. இதற்​கிடை​யில், புறநகர் மின்​சார ரயில் சேவை இரு மார்க்​கத்​தி​லும் நேற்று மேலும் 45 சேவை​களைக் குறைத்து இயக்​கப்​படும் என சென்னை ரயில்வே கோட்​டம் அறி​வித்​தது.

இருப்​பினும், பயணி​களின் சிரமத்​தைக் குறைக்க, சென்னை எழும்​பூர் - பரங்​கிமலை மற்​றும் கூடு​வாஞ்​சேரி, செங்​கல்பட்டு இடையே 26 கூடு​தல் மின்​சார ரயில் சேவை​கள் (மின்​சார ரயில் ஷட்​டில் சேவை​கள்) அறிவிக்​கப்​பட்டுள்​ளன. இந்த சிறப்பு ரயில்​கள் செல்​லும் போது இரு மார்க்​கத்​தி​லும் பல்​லாவரம், கோடம்​பாக்கம், நுங்​கம்​பாக்கம், சேத்​துப்​பட்டு ஆகிய நிலை​யங்​களில் நிற்​காது.

கடற்​கரை - தாம்​பரம் இடையே இயக்​கப்​படும் ஏசி மின்​சார ரயில்​கள் வார ​நாட்​களில் முழு​மை​யாக ரத்து செய்​யப்​படு​கின்​றன. திரு​மால்​பூர் - அரக்​கோணம், கடற்கரை - அரக்​கோணம் விரைவு மின்​சார ரயில்​கள், செங்​கல்​பட்டு - கடற்​கரை பகுதி விரைவு மின்​சார ரயில்​கள் பரங்​கிமலை​யில் நின்று செல்​லும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கட்சி தலை​வர்​கள் வலி​யுறுத்​தல்:

மின்​சார ரயில் சேவை குறைக்​கப்​பட்​டுள்​ளதற்கு பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளதோடு, இதற்கு மாற்று ஏற்​பாடு​களை மேற்​கொள்ள வேண்​டும் என்று ரயில்வே துறையை வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

திமுக எம்​.பி. கனி​மொழி வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், ‘‘சென்னை கடற்​கரை - செங்​கல்​பட்டு வழித்​தடத்​தில் கடந்த சில நாட்​களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்​யப்​பட்டு வரு​வதும், அதனால் பொது​மக்​கள் மிகுந்த அவதிக்​குள்​ளாவதும் வேதனையளிக்​கிறது.

அன்​றாடம் பணிக்​குச் செல்​வோர் தொடங்கி பள்​ளி, கல்​லூரி மாணவர்​கள் வரை கடும் மன உளைச்​சலுக்கு ஆளாக்​கி​யுள்​ளனர். வரும் வாரங்​களில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்​வு​கள் தொடங்​க​வுள்ள நிலை​யில், தெற்கு ரயில்வே மெத்​தன​மாக செயல்​ப​டா​மல் இப்​பிரச்​சினைக்கு விரைந்து தீர்​வு​காண வேண்​டும்’’ என்று கூறி​யுள்​ளார்.

இதே​போல் தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை, தமிழக வாழ்​வுரிமைக் கட்​சித் தலை​வர் தி.வேல்​முரு​கன், திமுக மாநிலங்​களவை உறுப்​பினர் பி.​வில்​சன், காங்​கிரஸ் எம்​.பி. மாணிக்​கம் தாகூர், தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா, எஸ்​டிபிஐ கட்சி தலை​வர் நெல்லை மு​பாரக் உள்​ளிட்​டோரும், பயணி​களின் சிரமத்​தைக் கருத்​தில்​கொண்டு ரயில்வே துறை மாற்று ஏற்​பாடு​களை மேற்​கொள்​ள வேண்​டும்​ என வலி​யுறுத்​தியுள்​ளனர்​.

SCROLL FOR NEXT