கோப்புப் படம்

 
தமிழகம்

ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்காததால் பயணிகள் ஏமாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​ப​டாத​தால் பயணி​கள் ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர்.

இந்​தாண்டு ஆடி அமா​வாசை நாளை புதன் கிழமை கடைபிடிக்​கப்​பட​வுள்​ளது. ஆடி அமா​வாசை தமிழ் மக்​களுக்கு முன்​னோர்​களை வழிபடும் மிக முக்​கிய​மான நாளாகும்.

இந்த நாளில் ராமேசுவரம், கன்​னி​யாகுமரி, தேவிபட்​டினம் போன்ற நீர்​நிலைகளில் மக்​கள் புனித நீராடி, தங்​கள் முன்​னோர்​களுக்கு தர்ப்​பணம் கொடுப்​பார்​கள்.

இதனிடையே தமிழகம் மற்​றும் பெங்​களூரிலிருந்​தும் பொது​மக்​கள் ஆடி அமா​வாசை அன்று ராமேசுவரத்​துக்கு சென்று தங்​களது முன்​னோர்​களுக்கு தர்ப்​பணம் மற்​றும் திதி வழங்​கு​வதை வாடிக்​கை​யாக கொண்​டுள்​ளனர்.

கடந்த ஆண்டு ஆடி அமா​வாசை தினத்​தில் ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்​டது. மேலும் மறு​நாள் ராமேசுவரத்​திலிருந்தும் கூடு​தல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

அதே​போல் இந்த ஆண்​டும் ஆடி அமா​வாசையை முன்​னிட்டு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என பயணி​கள் சிலர் எதிர்​பார்த்​துள்​ளனர். ஆனால் அரசு தரப்​பில் இருந்து எந்த அறி​விப்​பும் வெளி​யாக​வில்​லை.

இதனால் பயணி​கள் ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர். இது குறித்து போக்​கு​வரத்து கழக அதி​காரி​களிடம் கேட்​கும்​போது, “இந்த ஆண்டு முக்​கிய நகரங்​களில் இருந்து ராமேசுவரத்​துக்கு நேரடி​யாக சிறப்பு பேருந்​துகள் ஏற்​பாடு செய்​ய​வில்​லை.

வழக்​க​மாக இயக்​கப்​படும் பேருந்​துகள் இயங்​கும். மேலும் திருச்​சி​யில் இருந்து அதி​கள​வில் ராமேசுவரத்​துக்கு பேருந்​துகள் இயக்​கப்​படு​கிறது, மக்​கள் அதை பயன்​படுத்​திக்​கொள்​ளலாம்” என தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT