திருப்பூரில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர்.

 
தமிழகம்

திருப்பூரில் தீவிரவாதிகள் கைது; மக்கள் பாதுகாப்பை பற்றி கவலையில்லை - கட்சித் தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: ​திருப்​பூரில் தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்ட சம்​பவம் குறித்து கருத்து தெரி​வித்த அரசி​யல் கட்​சி​யினர், தமிழக மக்​களின் பாது​காப்பை பற்றி திமுக​வுக்கு கவலை​யில்லை என்று கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: திருப்​பூரில் 8 தீவிர​வா​தி​களை டெல்லி போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். டெல்லி போலீ​ஸார் வந்து கைது செய்​யும் வரை தமிழக போலீஸார் என்ன செய்​து​கொண்டு இருந்​தனர், தீவிர​வாத தாக்​குதல் எனும் கொடூர உச்​சத்​துக்கு தமிழகத்​தின் சட்​டம் ஒழுங்கு சீர்​குலைந்து இருக்​கிறது. ஆனால் அதை கட்​டுப்​படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுத்​த​தாக தெரிய​வில்​லை.

          

பயங்​கர​வாதத்​ததை கட்​டுப்​படுத்​து​வதற்கு பதிலாக பயங்​கர​வாத செயல்​களில் ஈடு​படும் நபர்​கள், அமைப்​புகளுக்கு திமுக மறை​முக ஆதரவு அளித்து வரு​கிறது. கோவை குண்​டு​வெடிப்பு குற்​ற​வாளி​களை விடு​தலை செய்​யக் கோரி பிரச்​சா​ரம் செய்து வருபவர்​களும் திமுக கூட்​டணி கட்​சி​யினரே. தமிழகத்​தில் ஆளும் திமுக அரசுக்கு மக்​களின் பாது​காப்பைபற்றி கவலை​ இல்​லை. சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​டணிக்கு தமிழக மக்​கள் சரி​யான பாடம் கற்​பிப்​பார்​கள்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கொலை, கொள்ளை என்​ப​தையெல்​லாம் தாண்​டி, தீவிர​வாத தாக்​குதல் எனும் கொடூர உச்​சத்​துக்கு தமிழக சட்​டம் ஒழுங்கை சீர்​குலைத்து வைத்​திருக்​கிறது திமுக அரசு. தீவிர​வா​தி​கள் கைது என்​பது தமிழகத்​தில் மத்​திய அரசின் என்ஐஏ மேற்​கொண்டு வரும் நிலை​யில், இங்​குள்ள மாநில அரசு இதை தடுக்க என்ன செய்​தது.

பயங்​கர​வாத எதிர்ப்​புப் படை (ஏடிஎஸ்) என்ன செய்​து​கொண்டு இருந்​தது. இந்த கையாலா​காத திமுக ஆட்​சியை தொடர விட்​டால், 1998 போல மீண்​டும் ஒரு கோரச் சம்​பவத்​துக்கு கூட வழி​வகுத்​து​விடும் என்ற அச்​சம் ஏற்​படு​கிறது. தமிழகத்​தில் அமைதி திரும்ப, திமுகஅரசுக்கு முடிவு​கட்ட வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தமிழகத்​தில் திமுக ஆட்​சிப்​பொறுப்​பேற்ற கடந்த 5 ஆண்​டு​களில் கொலை, கொள்​ளை, பெண்​களுக்கு எதி​ரான குற்​றச்​சம்​பவங்​கள் என உச்​சத்​தில் இருக்​கும் சட்​டம் ஒழுங்கு சீர்​கேட்​டோடு பயங்​கர​வா​தி​கள் மற்​றும் அவர்​களுக்கு ஆதர​வானவர்​களின் நடமாட்​ட​மும் அதி​கரித்​திருப்​பது மக்​கள் பாது​காப்​பில் திமுக தோல்​வியடைந்​திருப்​ப​தையே வெளிப்​படுத்​துகிறது. 2022 கோவை​ குண்​டு​வெடிப்பு சம்​பவத்தை சிலிண்​டர் வெடிப்பு என திசை​திருப்​பிய தி​முக அரசு, தற்​போது இச்​சம்​பவத்​தை என்​ன சொல்​லி சமாளி​க்​கப்​ ​போகிறது? இவ்வாறு கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT