திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகர்.

 
தமிழகம்

பொன்னேரி (தனி) தொகுதியில் வாக்குறுதிகளைக் கூறி வாக்குவேட்டை

இரா.நாகராஜன்

பொன்​னேரி (தனி்) சட்​டப்​பேரவை தொகு​தி​யில் திமுக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ், அதி​முக, நாம் தமி​ழர் கட்​சி, தமிழக வெற்​றிக் கழகம் உள்​ளிட்ட கட்​சிகள் மற்​றும் சுயேச்​சைகள் என 13 பேர் களத்​தில் உள்​ளனர்.

இந்​திய தேசிய காங்​கிரஸ் - துரை.சந்​திரசேகர்

காங்​கிரஸ் வேட்​பாள​ரான துரை.சந்​திரசேகரை ஆதரித்​து, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், தமிழக காங்​கிரஸ் கமிட்​டித் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை உள்​ளிட்​டோர் பிரச்​சா​ரம் செய்​துள்​ளனர்.

கடந்த 5 ஆண்​டு​களில் மேற்​கொள்​ளப்​பட்ட அரசு திட்​டப்​பணி​கள் குறித்​தும், காங்​கிரஸ், திமுக தேர்​தல் அறிக்​கை​களை முன்​வைத்​தும் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கி​றார்.

வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர் பி.பலராமன்.

அதி​முக - பி.பல​ரா​மன்

அதி​முக வேட்​பாள​ரான பி.பல​ரா​மனை ஆதரித்​து, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, காளி​யம்​மாள், நடிகை​கள் விந்​தி​யா, கவுதமி உள்​ளிட்​டோர் பிரச்​சா​ரம் செய்​துள்​ளனர்.

அதி​முக ஆட்​சி​யில் கொண்​டு​வரப்​பட்ட சமூக நலத்​திட்​டங்​கள் மீண்​டும் கொண்டு வரப்​படும் எனவும், அதி​முக தேர்​தல் அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்ள வாக்​குறு​தி​கள் நிறை​வேற்​றப்​படும் எனவும் எடுத்​துரைத்து தீவிர​மாக வாக்கு சேகரித்து வரு​கி​றார்.

கிராமங்கள் தோறும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜாத்தி.

நாம் தமி​ழர் கட்சி - ராஜாத்தி

நாதக வேட்​பாளர் ராஜாத்​தியை ஆதரித்​து, சீமான் பிரச்​சா​ரம் செய்​துள்​ளார். தொகு​தி​ யில் சாலை, தெரு விளக்கு, குடிநீர், பேருந்து வசதி உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் இல்​லாத பகு​தி​களில் அவ்​வச​திகளை செய்து தரு​வேன் என உறு​தி​யளித்து பிரச்​சா​ரம் செய்கி​றார்.

தமிழக வெற்​றிக் கழகம் - ரவி

தவெக வேட்​பாளர் ரவி, பொன்​னேரி தொகு​தி​யில் நீர் நிலை​கள் தூர்​வாரப்​படும், ஆரணி பகு​தி​யில் நெச​வாளர்​கள் பயன்​பெறும் வகை​யில் சாயப்​பட்​டறை, சாயக் கழி​வு​கள் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்​கப்​படும், மாணவ - மாணவி​கள் பயன்​பெறும் வகை​யில் காலை, மாலை நேரங்​களில் சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படும் என்பன உள்​ளிட்ட வாக்​குறு​தி​களை அளித்து வாக்கு சேகரித்து வருகி​றார்.

பொன்னேரி தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரிக்கின்றனர். எவை மக்களைக் கவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT