தமிழகம்

ஏப்.2 முதல் 19-ம் தேதி வரை பழனிசாமி தீவிர பிரச்சாரம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. இதில் 150 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​களை பொதுச் செய​லா​ளர் பழனிசாமி அறி​வித்​துள்​ளார். 297 வாக்​குறு​தி​கள் அடங்​கிய தேர்​தல் அறிக்​கை​யை​யும் வெளி​யிட்​டுள்​ளார்.

வேட்​புமனு தாக்​கல் நாளை (மார்ச் 30) தொடங்க உள்​ளது. இந்த நிலை​யில், தமிழகம் முழு​வதும் ஏப்.2 முதல் 19-ம் தேதி வரை மாவட்ட வாரி​யாக தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொள்ள பழனி​சாமி திட்​ட​மிட்​டுள்​ளார்.

          

இதுதொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஏப்​.2-ம் தேதி தரு​மபுரி, கிருஷ்ணகிரி, 3-ம் தேதி வாணி​யம்​பாடி, வேலூர், 4-ம் தேதி திரு​வண்​ணா​மலை மாவட்​டம் ஆரணி, விழுப்​புரம், 5-ம் தேதி புதுச்​சேரி, கடலூர், 6-ம் தேதி பெரம்​பலூர், உளுந்​தூர்​பேட்​டை, 7-ம் தேதி சேலம் மாவட்​டம் வாழப்​பாடி, கங்​கவல்​லி, ஆத்​தூரில் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படு​கிறார்.

தொடர்ந்து 8, 9-ம் தேதி​களில் சென்னை மாவட்ட தொகு​தி​கள், 10-ம் தேதி காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், 11-ம் தேதி தஞ்​சாவூர், திரு​வாரூர், 12-ம் தேதி நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை மாவட்​டம் செம்​ப​னார்​கோ​வில், 13-ம் தேதி திருச்​சி, திண்​டுக்​கல்​லில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

அதைத் தொடர்ந்​து, 14-ம் தேதி தேனி மாவட்​டம் ஆண்​டிபட்​டி, மதுரை, 15-ம் தேதி கரூர், திருப்​பூர், 16-ம் தேதி கோவை மேட்​டுப்​பாளை​யம், ஈரோடு மாவட்​டம் கோபிசெட்​டி​பாளை​யம், 17-ம் தேதி சேலம் மாவட்ட தொகு​தி​கள், 18-ம் தேதி நாமக்​கல் மாவட்​டம் திருச்​செங்​கோடு, ஈரோடு, 19-ம் தேதி சேலம் மாவட்ட தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார் என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT