கோவை விமான நிலையத்தில் நேற்று பிரதமரை வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார். உடன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

 
தமிழகம்

கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள்: பிரதமரிடம் பழனிசாமி கோரிக்கை மனு

செய்திப்பிரிவு

கோவை: கோவை, மதுரை நகரங்​களில் மெட்ரோ ரயில் திட்​டங்​களை விரை​வாக செயல்​படுத்த வேண்டும் என்று வலி​யுறுத்தி பிரதமர் மோடி​யிடம், அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனி​சாமி கோரிக்கை மனு வழங்​கி​னார்.

கோவை​யில் நேற்று நடந்த தென்​னிந்​திய இயற்கை விவ​சா​யிகள் மாநாட்​டில் பங்​கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலை​யத்​தில் வரவேற்ற பழனி​சாமி, பின்​னர் பிரதமரிடம் அளித்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: இயற்கை விவ​சா​யத்​தில் விளைச்​சல் குறை​வாக உள்ள நிலை​யில், விவ​சா​யிகளுக்கு மண் புழுக்​கள், நுண்​ணுயி​ரி​கள், இயற்கை உரங்​களை மானிய விலை​யில் வழங்க வேண்​டும்.

கோவை​யில் தேங்​காய், தக்​காளி, ஈரோட்​டில் மஞ்​சள், தரு​மபுரி, கிருஷ்ணகிரி​யில் மாம்​பழம், டெல்டா மாவட்​டங்​களில் நெல், திருச்​சி​யில் வாழை, கரும்பு என பரவலாக சாகுபடி செய்​யப்​படும் பயிர்​களை இயற்கை விவ​சா​யத்​தில் சாகுபடி செய்​யும் விவ​சா​யிகளுக்கு ஊக்​கத்​தொகை வழங்க வேண்​டும். இந்​தப் பயிர்​களுக்கு தனி மானி​யத் திட்​டங்​களை அறி​விப்​பதுடன், இயற்கை வேளாண் விளை பொருட்​களை விற்​பனை செய்ய அரசு நேரடி சந்​தையை அமைக்க வேண்​டும்.

கோவை, மதுரை நகரங்​களுக்​கான மெட்ரோ ரயில் திட்​டங்​களை விரை​வாக செயல்​படுத்த வேண்​டும். டிராக்​டர், விவ​சாயக் கருவி​களுக்​கான ஜிஎஸ்டி 5 சதவீத​மாக குறைக்​கப்பட்​டுள்​ளது வரவேற்​கத்தக்​கது. அதே​போல, விவ​சாய, வீட்​டுப் பயன்​பாட்​டுக்கான மோட்​டார் பம்​பு​கள்மீதான ஜிஎஸ்​டியை 5 சதவீத​மாக குறைக்க வேண்​டும்.

பிரதமரை வரவேற்ற பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை. உடன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்.

எம்​எஸ்​எம்இ துறை​யில் இன்​ஜினீயரிங் ஜாப்​-ஒர்க் பணிக்​கான ஜிஎஸ்டி 18 சதவீத​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ள​தால், சிறு, நடுத்தர நிறு​வனங்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. எனவே, வரியை 5 சதவீத​மாக குறைக்க வேண்​டும்.

சுற்​றுச்​சூழல் பாது​காப்பை மேம்​படுத்​தும் மறுசுழற்சி பொருட்​களுக்​கான ஜிஎஸ்​டியை 5 சதவீத​மாக குறைக்க வேண்​டும். கோவை சர்​வ​தேச விமான நிலைய விரி​வாக்​கப் பணி​களை விரை​வாக தொடங்க வேண்​டும்.

கோவை-​ராமேசுவரம் ரயிலை மீண்​டும் இயக்க வேண்​டும். மென்​பொருள் துறை​யில் பணி​யாற்​றும் ஊழியர்​கள் நலனைக் கருத்​தில் கொண்​டு, கோவை - பெங்​களூரு இடையே இரவு நேர ரயில் சேவையை ஏற்​படுத்த வேண்​டும்.

அமெரிக்க வரி விதிப்பை எதிர்​கொள்ள உதவும் வகை​யில், ஆயத்த ஆடை மற்​றும் வீட்டு உப யோக ஜவுளி ரகங்​களை உற்​பத்தி செய்​வோருக்கு கடனைத் திருப்பி செலுத்​து​வதற்​கான கால அவ​காசம் நீட்​டிப்பு உள்​ளிட்ட சலுகைகளை ரிசர்வ் வங்கி அமல்​படுத்தி உள்​ளது. இந்த அறி​விப்பை நூற்​பாலை, கைத்​தறி, விசைத்​தறி தொழில்​ துறையினருக்​கும்​ விரிவுபடுத்​த வேண்​டும்​. இவ்​​வாறு மனு​வில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT