‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் திருத்தணி சட்டப்பேரவை தொகுதி வீரகநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உரையாற்றினார்.

 
தமிழகம்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்கள் நிலையை உயர்த்த நடவடிக்கை: பழனிசாமி உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்கள் நிலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பழனி​சாமி உறுதி அளித்துள்ளார். அதிமுக பொதுச்​செய​லா​ள​ரும், முன்​னாள் முதல்​வரு​மான பழனி​சாமி, ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கிறார்.

அதன்​படி, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் உள்ள திருத்​தணி மற்​றும் திரு​வள்​ளூர் சட்​டப்​பேரவை தொகு​தி​களில் நேற்று சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். இதில், திருத்​தணி சட்​டப்​பேரவை தொகு​தி​யில், வீரகநல்​லூரில் பழனி​சாமி பேசி​ய​தாவது: நான் எழுச்சி பயணம் மேற்​கொண்ட அனைத்து தொகு​தி​களி​லும் மக்​களின் வரவேற்பு அமோக​மாக உள்​ளது. அதி​முக​வின் வெற்​றியை மக்​களின் எழுச்​சி​யில் பார்க்க முடிகிறது.

அடுத்​தாண்டு தேர்​தலில் அதிமுக வெற்றி பெற்று தனிப்​பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும். அதிமுக கூட்​டணி 210 இடங்​களில் வெல்​லும். திமுக ஆட்​சி​யில், அவர்​கள் குடும்​பம் மட்​டும் வளமாகியது. கருணாநி​தி, ஸ்டா​லின், உதயநி​தி, அடுத்து இன்​பநி​தி. இந்த வாரிசு அரசி​யல் தேவை​யா? திமுக ஆட்​சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து என்​றார்​கள். ரகசி​யம் தெரி​யும் என்​றார் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்.

இப்​போது எங்​களால் முடி​யாது என்று சொல்​லி​விட்​டார் முதல்​வர் ஸ்டா​லின். இது​தான் அந்த ரகசி​யம். மக்​களை ஏமாற்றி வாக்​கு​களை பெற்று அந்​தர்​பல்டி அடித்​து​விட்​டது திமுக. 2021 தேர்​தலில், கொடுத்த 525 வாக்​குறு​தி​களில், நான்​கில் ஒரு பங்கை கூட திமுக நிறைவேற்​ற​வில்​லை.

திருத்​தணி சுப்​பிரமணி​யசு​வாமி கோயி​லில் உள்​ளூர் மக்​கள் செவ்​வாய்​கிழமை​களில் வழி​பாடு செய்ய சிறப்பு அனு​மதி கொடுக்​கப்​பட்​டது. அந்த அனு​ம​தி, திமுக ஆட்​சி​யில் மறுக்​கப்​பட்​டுள்​ளது. அதிமுக ஆட்​சி​யில் திருத்​தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் உள்​ளூர் மக்​கள் செவ்​வாய்க்​கிழமை​களில் தரிசனம் செய்ய சிறப்பு அனு​மதி வழங்​கப்​படும்.

விசைத்​தறி, கைத்​தறி நெச​வாளர் நிலை சரிந்​து​போய் இருக்​கிறது. நெச​வாளர் நிலை மீண்​டும் சிறக்க அதிமுக ஆட்​சி​யில் நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். இந்த நிகழ்​வில், அதிமுக அமைப்பு செய​லா​ள​ரும், முன்​னாள் எம்​பி​யு​மான கோ. அரி, திரு​வள்​ளூர் மேற்கு மாவட்ட செய​லா​ள​ரும், முன்​னாள் அமைச்​சரு​மான பி.​வி.ரமணா உள்​ளிட்ட அதிமுக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் உட்பட ஏராள​மானோர் பங்​கேற்றனர்.

SCROLL FOR NEXT