தமிழகம்

விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்: பழனிசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: நெல் ஈரப்​ப​தம் தொடர்​பாக மத்​திய அரசை வலி​யுறுத்தி தளர்வை பெறத் தவறியது, முதல்​வர் மு.க.ஸ்டா​லின் விவ​சா​யிகளுக்கு செய்த துரோகம் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நெல் பயி​ரிடப்​படும் பரப்​பு, விளைச்​சலுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களைத் திறந்​து, தேவை​யான நிதி ஒதுக்​கீடு செய்​து, சாக்கு மற்​றும் சுமை தூக்​கும் பணி​யாளர்​கள், லாரி போக்​கு​வரத்​து, சேமிப்​புக் கிடங்​கு​கள் போன்ற வசதி​களை செய்து கொடுத்​து, உரிய நேரத்​தில் கொள்​முதல் செய்ய வேண்​டியது அரசின் கடமை.

ஆனால், ஒவ்​வோர் ஆண்​டும் திமுக அரசு இவற்றை முன்​கூட்​டியே திட்​ட​மிட்டு செயல்​படுத்​தத் தவறி​விட்​டது. நடப்​பாண்டு குறுவை சாகுபடி​யில் இவற்றை செய்​யாத​தால், டெல்டா விவ​சா​யிகள் வியர்வை சிந்தி விளை​வித்த நெல்லை கொள்​முதல் செய்ய தாமத​மாகி​விட்​டது.

இதனால் மழை​யில் நெல் மூட்​டைகள் நனைந்து விவ​சா​யிகளுக்கு பேரிழப்பு ஏற்​பட்​டுள்​ளது. குறுவை சாகுபடி​யின் போது மழை பெய்​யும் என்​ப​தால் ஈரப்​ப​தம் 22 சதவீதம் வரை இருக்​கும்.

எனவே, நெல் ஈரப்பத தளர்வு முயற்​சியை உரிய நேரத்​தில் மேற்​கொள்​ளாமல், மத்​திய அரசு அனு​மதி மறுத்​த​தாக திசை திருப்​புவது ஏன்? தன் சொந்​தப் பிரச்​சினை​களுக்​காக டெல்லி செல்​லும் முதல்​வர், விவ​சா​யிகளின் பிரச்​சினைக்​காக டெல்லி செல்​லாதது ஏன்? போராட்​டம் என்ற போர்​வை​யில் மக்​களை ஏமாற்றி அரசி​யல் செய்​வது ஏன்? 39 எம்​.பி.க்​களை வைத்​திருந்த போதி​லும், மத்​திய அரசை வலி​யுறுத்தி தளர்வை பெறத் தவறியது, விவ​சா​யிகளுக்கு முதல்​வர் ஸ்டா​லின் செய்த துரோக​மாகும். இதற்​காக திமுக அரசுக்கு கடும் கண்​டனம் தெரி​வித்​துக் கொள்கிறேன். இவ்​வாறு பழனிசாமி தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT