சென்னையில், அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பேராயர்கள், ஆயர்களுடன் இணைந்து அதிமுக பொது செயலாளர் பழனிசாமி ‘கேக்’ வெட்டினார். | படம்: எஸ். சத்தியசீலன் |

 
தமிழகம்

திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு நலத்திட்டங்கள் மறுப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக சார்​பில் கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள சிஎஸ்ஐ தேவால​யத்​தில் கிறிஸ்​து​மஸ் விழா நேற்று முன்தினம் கொண்​டாடப்​பட்​டது. கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பங்​கேற்று ஏழை, எளிய மக்​களுக்கு தையல் இயந்​திரம், இஸ்​திரிப்​பெட்​டி, மாற்​றுத் திற​னாளி​களுக்கு மூன்​றுசக்கர வாக​னம் உள்​ளிட்ட நலத்​திட்ட உதவி​கள், இனிப்​பு​கள் அடங்​கிய பரிசுப் பைகளை வழங்​கி​னார்.

பின்​னர், நிகழ்ச்​சி​யில் பழனி​சாமி பேசி​ய​தாவது: பரம்​பரை​யாக தாங்​களே பதவி சுகத்தை அனுபவிக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தோடு, வாக்கு வங்​கிக்​காக ஆட்​டுத்​தோலை போர்த்​திக் கொண்டு வரும் ஓநாய் கூட்​டத்​தினரிடம் சிறு​பான்​மை​யினர் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும்.

தீய சக்​தி​களிடம் நாம் ஏமாந்து போய்​விட்​டால், பின்​னர் ‘விடியல்’ என்​பதே இருக்​காது. தமிழகம் இருளில் மூழ்கி விடும். எனவே நாம் விழிப்​புடன் செயல்​படும் காலம் இது.

சிறு​பான்மை மக்​களுக்கு அதிமுக அரசின் மூலம் கிடைத்து வந்த பல நலத்திட்​டங்​கள் திமுக ஆட்​சிக்கு வந்த இந்த 55 மாத காலத்​தில் கிடைப்​ப​தில்​லை. எம்​ஜிஆர் தொடங்​கி, இன்று வரை சாதி மதங்​களுக்கு அப்​பாற்​பட்ட ஒரு சமூக நல்​லிணக்க இயக்​கம் அதிமுக. சிறு​பான்மை மக்​களின் உரிமை​கள் காக்​கப்பட வேண்​டும் என்​ப​தில் எப்​போதும் உறு​தி​யாக இருக்​கும் இயக்​கம்.

எனவே, சிறு​பான்மை சமு​தாய மக்​கள் வரும் தேர்​தலில் விழிப்​போடு செயல்​பட்டு தீய சக்​தி​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களை ஆட்சி அதி​காரத்​தில் இருந்து அப்​புறப்​படுத்​தி, தமிழகத்​தில் நடக்​கும் சீர்​கேட்டை களைய அதிமுக​வுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​னாள் அமைச்​சர்​கள் பொன்​னையன், செம்​மலை, நத்​தம் விஸ்​வ​நாதன், திண்​டுக்​கல் சீனி​வாசன், ஜெயக்​கு​மார், வைகைச்​செல்​வன், பெஞ்​சமின், இன்​பதுரை எம்​.பி. மாவட்​டச் செய​லா​ளர்​கள் தி.நகர் சத்​யா, வி.எஸ்​.​பாபு உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்​.

SCROLL FOR NEXT