பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

 
தமிழகம்

“எங்களைப் பார்த்தால் பாவமாகத் தெரியவில்லையா?” - ஓபிஎஸ் கேள்வி

செய்திப்பிரிவு

முன்​னாள் முதல்​வ​ரும் அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் கழகம் ஒருங்​கிணைப்​பாள​ரு​மான ஓபிஎஸ், தேர்​தலில் எடுக்க வேண்​டிய நிலைப்​பாடு குறித்து தனது அமைப்​பின் தேனி மாவட்ட நிர்​வாகி​களு​டன் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

பெரியகுளம் அருகே கைலாசபட்​டி​யில் உள்ள தனது பண்ணை வீட்​டில் நடந்த இந்​தக் கூட்​டத்​துக்​குப் பிறகு செய்​தி​யாளர்​களிடம் ஓபிஎஸ் கூறிய​தாவது:

நாங்​கள் எந்த ஒரு முடி​வும் எடுக்​காத நிலை​யில் வதந்​தி​களை தொலைக்​காட்சி மற்​றும் யூடியூப் சேனல்​கள் செய்​தி​யாக வெளி​யிடு​வது ஜனநாயகத்​திற்கு ஆபத்​தானது. எங்​கள் பக்​கம் தொண்​டர்​கள் இருக்​கி​றார்​கள் என்​பதை நிரூபித்​துக் காட்​டவே மக்​கள​வைத் தேர்​தலில் ராம​நாத​புரத்​தில் சுயேச்​சை​யாகப் போட்​டி​யிட்​டேன்.

          

அந்​தத் தேர்​தலில் 12 நாட்​கள் தான் எனது தேர்​தல் பிரச்​சா​ரம் இருந்​தது. அப்​போது 6 ஓ.பன்​னீர்​செல்​வங்​களை நிறுத்​தி​னார்​கள். எப்​படி​யா​வது ஓபிஎஸ்ஸை தோற்​கடித்​து, தொண்​டர்​களும் மக்​களும் அவர் பக்​கம் இல்லை என்ற நிலையை உரு​வாக்க வேண்​டும் என்​ப​தற்​காகச் செய்​யப்​பட்ட சூழ்ச்சி தான் அது என்​ப​தைச் சொல்​லக் கடமைப்​பட்​டுள்​ளேன்.

அந்த சூழ்ச்​சிகளை எல்​லாம் முறியடித்து சட்​டப் போராட்​டத்​தின் மூலம் அதி​முக தொண்​டர்​களின் உரிமையை மீட்​டெடுப்​பது தான் எங்​கள் நோக்​கம். தனிக் கட்சி தொடங்​கு​வது குறித்​தோ, தேர்​தலில் போட்​டி​யிடு​வது குறித்தோ நாங்​கள் இன்​னும் முடிவு எடுக்​க​வில்​லை. பிரிந்து கிடக்​கும் அதி​முக சக்​தி​களை ஒருங்​கிணைக்​க​வும், யாராலும் வெல்​ல​முடி​யாத சக்​தி​யாக அதி​முக-வை எப்​படி ஜெயலலிதா உரு​வாக்​கி​னாரோ அத்​தகைய சூழலை மீண்​டும் உரு​வாக்​க​வும் தான் சட்​டப் போராட்​டம் நடத்​திக் கொண்​டிருக்​கி​றோம்.

எனவே, தேவை இல்​லாத குழப்​பங்​களை தொண்​டர்​கள் மற்​றும் மக்​கள் மத்​தியில் ஏற்​படுத்த வேண்​டாம். தேனி மாவட்​டம் அதி​முக சரித்​திரத்​தில் இடம்​பெற்​றிருக்​கிறது. எம்​ஜிஆர், ஜெயலலிதா என இரண்டு பேரை முதலமைச்​ச​ராக ஆக்​கியது தேனி மாவட்​டம். இந்த மாவட்​டத்​தைச் சேர்ந்​தவன் என்ற முறை​யில் அதி​முக மீண்​டும் ஒன்​றிணைய வேண்​டும் என்​பதை நானும் என்​னோடு சேர்ந்த 88 மாவட்​டச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்ட நிர்​வாகி​களும் தலை​யாய கோரிக்​கை​யாகக் கொண்டு போராடி வரு​கி​றோம்.

எதிரும் புதிரு​மாக இருந்த டிடி​வி.​தினகரனும் இபிஎஸ்​ஸுமே தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் ஒன்​றிணைந்​திருக்​கி​றார்​கள். நாங்​களும் ஒன்​றிணை​யத் தயா​ராய் இருக்​கி​றோம். டிடி​வி.​தினகரன் இதை அவரது அருமை அண்​ணன் இபிஎஸ்​ஸிடம் வலி​யுறுத்த வேண்​டும். அப்​படி இணைந்​தால் அதி​முக மாபெரும் வெற்றி பெறும்.

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் சேர எங்​களுக்கு அழைப்பு வந்​ததா என்​பது பரம ரகசி​யம். நான் இரண்​டாவது தர்​ம​யுத்​தத்தை தொடங்​கக் காரணமே இப்​போது திமுக-​வில் இருக்​கும் மனோஜ் பாண்​டிய​னும் வைத்​தி​லிங்​க​மும் தான். நான் தவெக அல்​லது திமுக-​வில் இணை​யப் போவ​தாக வதந்​தி​களை பரப்​புவதை ஊடகங்​கள் நிறுத்த வேண்​டும். எங்​களைப் பார்த்​தால் பாவ​மாகத் தெரிய​வில்​லை​யா... தொடர்ந்து பொய்ச்​செய்​தி​களை வெளி​யிட்டு வரு​கிறீர்​கள்.

குழப்​பம் விளைவிக்க வேண்​டும் என்​ப​தற்​காகவே சில செய்​தி​களை வெளி​யிடு​கி​றார்​கள். அதி​முக-​வில் ஒன்​றிணைய நான் ரெடி​யாக இருக்​கிறேன். டிடி​வி.​தினகரனும் இபிஎஸ்​ஸும் ரெடியா என்று கேட்​டுச் சொல்​லுங்​கள். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

SCROLL FOR NEXT