கோப்புப் படம்

 
தமிழகம்

உத்திரமேரூர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பில் ஓர் இயந்திரம் பழுது: நீதிமன்றத்தை நாட திமுக முடிவு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: கடந்த மே 4-ம் தேதி வெளி​யான தமிழக சட்​டசபை தேர்​தல் முடிவு​களின்​படி, உத்திரமேரூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட திமுக வேட்​பாளர் க.சுந்​தர் 70,694 வாக்​கு​கள் பெற்ற நிலை​யில், அவரை விட 14,223 வாக்​கு​கள் அதி​கம் பெற்​று, 84,917 வாக்​கு​களு​டன் தவெக வேட்​பாளர் முனிரத்​தினம் வெற்றி பெற்​றார்.

இருப்​பினும், வாக்​குப்​ப​திவு முடிவு​கள் குறித்து சந்​தேகம் தெரி​வித்த திமுக வேட்​பாளர் க.சுந்​தர், 10 குறிப்​பிட்ட வாக்​குச்​சாவடிகளின் வாக்​குப்​ ப​திவு​களை சரி​பார்க்​கக்​கோரி தேர்​தல் ஆணை​யத்​திடம் மனு அளித்​தார்.

அதற்​கான கட்​ட​ணங்​களை செலுத்​தி​யதைத் தொடர்ந்​து, தேர்​தல் ஆணை​யத்​தின்உத்​தர​வுப்​படி காஞ்​சிபுரம் ஆட்​சி​யர் சினேகாதலை​மை​யில், பெல் பொறி​யாளர்​கள் உதவி​யுடன் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சரி​பார்க்​கும் பணி கடந்த 3 நாட்​களாக நடை​பெற்​றது.

வாக்​குச்​சாவடி இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டிருக்​கும் கிடங்​கிலேயே இந்​தப் பணி​கள் நடை​பெற்று வந்​தன. வாக்குப்பதிவு சரி​பார்ப்பு தொடங்​கிய​போது மாதிரி வாக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு காட்​டப்​பட்​டன.

ஆனால் பழைய வாக்​குப்​ப​தி​வின்​ போது விவிபேட்​டில்பதி​வான வாக்​கு​களை எண்ண வேண்​டும் என்று க.சுந்​தர் கோரிக்கை வைத்​தார். தேர்​தல் ஆணைய விதிப்​படி அதை எண்ண முடி​யாது என்று ஆட்​சி​யர் தெரி​வித்​தார்.

இதனைத் தொடர்ந்​து, க.சுந்​தர் ஆட்​சேபனை கடிதம் கொடுத்​து​விட்​டு, அதன் பிறகு வாக்​குப்​ப​திவு சரி​பார்ப்பு நடவடிக்​கை​களில் பங்​கேற்​க​வில்லை. இந்​நிலை​யில், வாக்​குப்​ப​திவு சரி​பார்ப்பு நடவடிக்​கைகள் நேற்று முடிவ​தாக இருந்​தது.

கடைசி​யாக 314-வது வாக்​குச்​சாவடி​யின் வாக்​குப்​ப​திவு இயந்​திரம் சரி​பார்க்​கப்​படும்​போது, அதை வி​விபேட் உடன் இணைக்க முடிய​வில்​லை. இதனால் பணி​யைத் தொடர முடி​யாமல் போனது.

இதுகுறித்து மாவட்ட ஆட்​சி​யர் சினேகா கூறுகை​யில், `ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 9 மணிக்​குள் பழு​தான இயந்​திரத்​துக்​குப் பதிலாக வேறு இயந்​திரத்​தைத் தேர்வு செய்​வதா அல்​லது அதே இயந்​திரத்தை பொறி​யாளர் மூலம் சரிசெய்து பார்க்க வேண்​டுமா என்​பதை திமுக வேட்​பாளர் தெரிவிக்க வேண்​டும்'' எனக் கூறி​னார்.

இதுகுறித்து திமுக வேட்​பாளர் க.சுந்​தர் கூறும்​போது, ``நாங்​கள் சந்​தேகத்​துக்​குரிய​தாகக் குறிப்​பிட்​டதே 10 இயந்​திரங்​களைத்​தான்.

அதில் ஒன்று பழுது எனக் கூறு​வதை ஏற்க முடி​யாது. மேலும், நாங்​கள் கேட்​டபடி விவிபேட் வாக்​குச்​சீட்​டு​கள் சரி பார்க்​கப்​ப​டாத​தால், தற்​போதைய நடவடிக்கை எங்​களுக்​குத் திருப்தி அளிக்​க​வில்​லை. எனவே இதனை எதிர்த்​து நீதி​மன்​றத்​தை நாட உள்​ளோம்​'' என்​றார்​.

SCROLL FOR NEXT