புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்த ராமதாஸின் மகள் காந்திமதி பரசுராமன் மற்றும் பேரன் முகுந்தன்.

 
தமிழகம்

தமிழகத்திலும் களம் இறங்க என்.ஆர்.காங்கிரஸ் திட்டம்: ரங்கசாமியுடன் ராமதாஸ் மகள், பேரன் சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமியை பாமக நிறு​வனர் ராம​தாஸின் மகளும், அன்​புமணியின் மூத்த சகோ​தரி​யு​மான காந்​திமதி பரசு​ராமன் (பாமக​வின் முன்​னாள் செயல் தலை​வர்)மற்​றும் அவரது மகன் முகுந்​தன் பரசு​ராமன் (பாமக இளைஞரணி முன்​னாள் தலை​வர்) ஆகியோர் நேற்று சந்​தித்​தனர். அப்​போது ரங்​க​சாமி இரு​வரை​யும் ஆசிர்வாதம் செய்து திருநீறு பூசி​ வரவேற்றார்.

இதுதொடர்​பாக கட்சி வட்​டாரங்​களில் விசா​ரித்​த​போது, “தமிழகத்​தில் என்​.ஆர். காங்​கிரஸ் கட்​சி​யைத் தொடங்​கு​வது குறித்து காந்​தி​ம​தி, முகுந்​தனிடம் ஆலோ​சிக்​கப்​பட்​டது. விரை​வில் தமிழகம் மற்​றும் புதுச்​சேரியைச் சேர்ந்த பாமக​வின் பல நிர்​வாகி​கள் இவர்​களு​டன் இணைந்து என்​.ஆர். காங்​கிரஸ் கட்​சி​யில் சேர உள்​ளனர்” என்று தெரி​வித்​தனர்.

முதல்​வர் ரங்​க​சாமியை சந்​தித்​தது தொடர்​பாக ராம​தாஸின் பேரன் முகுந்​தனிடம் கேட்​டதற்​கு, “நாங்​கள் ஐயாவை (ராம​தாஸ்) சந்​தித்து தெளி​வாக தெரி​வித்து விட்​டோம். அக்​கட்​சிக்கு (பாமக) போகவே மாட்​டோம். அவர்​களு​டன் பேச​வும் மாட்​டோம். நாங்​கள் அக்​குடும்​பமே இல்லை என்று சொல்​லி​விட்​டோம். முதல்​வர் ரங்​க​சாமி சந்​திப்பு தொடர்​பாக நல்ல செய்தி விரை​வில் வரும்” என்​றார்.

இதுபற்றி என்​ஆர்​.​காங்​கிரஸ் வட்​டாரங்​களில் விசா​ரித்த ​போது, “கடலூர், விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, நாகை, மயி​லாடு​துறை மற்​றும் சேலம் ஆகிய தமிழக பகு​தி​களில் முதல்​வர் ரங்​க​சாமிக்கு செல்​வாக்கு உள்​ளது.

இதனால் தமிழகத்​தில் இப்​பகு​தி​களில் போட்​டி​யிடலாம் என்ற விருப்​பம் ரங்​க​சாமிக்கு நீண்டகால​மாக உண்​டு. இதற்​கிடைய தமிழக முதல்​வர் விஜய்,அமைச்​சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோ​ருடன் நெருங்​கிய நட்​பில் ரங்​க​சாமி உள்​ளார்.

தற்​போது புதுச்​சேரி பாஜக​வுடன் ரங்​க​சாமிக்கு இணக்​க​மான சூழல் இல்​லை. இந்​நிலை​யில் என்​.ஆர். காங்​கிரஸை தமிழகத்​தி​லும் தொடங்​கும் பணி​களை விரைவுபடுத்​தும் திட்​ட​மிட்​டுள்​ளது” என்று தெரிவிக்​கின்​றனர்.

இந்நிலையில், பாமக​வில் ராம​தாஸ் அணி​யில் அதிருப்​தி​யாக இருக்​கும் சேலத்தை சேர்ந்த முன்​னாள் எம்​எல்​ஏ அருள் மற்​றும் முக்​கிய நிர்​வாகி​கள் முதல்​வர் ரங்​க​சாமியை புதுச்​சேரி​யில் சந்​தித்து தங்​களை என்​.ஆர்​.​காங்​கிரஸ் கட்​சி​யில் இணைத்​துக்​கொண்​டனர். முதல்​வர் ரங்​க​சாமி​யின் பிறந்த நாளான ஆகஸ்ட் 4-ல் சென்​னை​யில் பிர​மாண்ட விழா நடத்த திட்​ட​மிட்​டுள்​ளனர். தமிழகத்​தில் என்​ஆர்​காங்​கிரஸ் விரி​வாக்​கத்தை ரங்​க​சாமி பிறந்​த​நாளில் புதிய அறி​விப்பு வெளி​யாக​வும் வாய்ப்​புள்​ள​தாக​வும் குறிப்​பிடு​கின்​றனர்.

SCROLL FOR NEXT