இலங்கையில் வடக்கு ரயில் பாதை மறுசீரமைப்புப் பணி களை தொடங்கிவைத்த இந்திய தூதர் சந்தோஷ் ஜா, இலங்கை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க.

 
தமிழகம்

‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு ரயில் பாதை: 5 மில்லியன் டாலர் இந்திய நிதியுதவியில் சீரமைப்பு

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கையில் ‘டிட்​வா’ புய​லால் பாதிக்​கப்​பட்ட வடக்கு ரயில் பாதையை 5 மில்​லியன் டாலர் இந்​திய நிதி​யுத​வி​யில் மறுசீரமைப்பு செய்​யும் பணி​கள் தொடங்​கி​யுள்​ளன. கடந்த டிசம்​பர் மாதத் தொடக்​கத்​தில் ‘டிட்​வா’ புயல் இலங்கையைத் தாக்​கியது. இதில் 643 பேர் உயி​ரிழந்​தனர்.

ஆயிரக்​கணக்​கானோர் காயமடைந்​தனர். மேலும், அந்​நாட்​டில் பெரும் சேதத்​தை​யும் ஏற்​படுத்​தி​யது. ஏற்​கெனவே, பொருளா​தார பின்​னடைவைச் சந்​தித்​துள்ள நிலை​யில், இந்த ‘டிட்​வா’ புயல் பேரிட​ரால் ஏற்​பட்ட சேதத்தை சீர்​படுத்த முடி​யாத நிலை இலங்கைக்கு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, உலக நாடு​கள், உலக வங்கி மற்​றும் சர்​வ​தேச நாணய நிதி​யம் உள்​ளிட்​ட​வை​களிடம் இருந்து இலங்கை கடன் உதவி கோரியது. அந்த வகை​யில், ‘டிட்​வா’ புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்கைக்கு உதவிடும் வகை​யில் இந்​திய அரசு ‘ஆபரேஷன் சாகர் பந்த்’ என்ற திட்​டத்​தின்​கீழ் நிவாரண உதவி​களைச் செய்​தது.

மேலும், பிரதமர் நரேந்​திர மோடி​யின் சிறப்பு தூத​ராக மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்சங்​கர் இலங்கை சென்​றார். அங்கு புய​லால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களைப் பார்​வை​யிட்​டதுடன், அந்​நாட்டு அதிபர் அநுர குமார திசா​நாயக்​கவை​யும் அவர் சந்​தித்​தார்.

அதைத்​தொடர்ந்​து, ‘டிட்​வா’ புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதி​யுத​வியை இந்​தியா வழங்​கியது. இது, ரூ.3,150 கோடி சலுகை கடன், ரூ.900 கோடி மானி​யங்​கள் என்​றும், இந்த நிதி​யுதவி புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்கையை மறுசீரமைப்பு செய்ய பயன்​படுத்​தப்​படும் என்​றும் அறிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்​தியா அளித்த நிதி​யுத​வியி​லிருந்து 5 மில்​லியன் அமெரிக்க டாலர் தொகை மதிப்​பில், இலங்கை​யின் வடக்கு ரயில் பாதை மறுசீரமைப்​புப் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

இதனை இலங்கைக்கான இந்​தி​யத் தூதர் சந்​தோஷ் ஜா, இலங்கையின் போக்​கு​வரத்​து, நெடுஞ்​சாலைகள் மற்​றும் நகர்ப்​புற மேம்​பாட்டு அமைச்​சர் பிமல் ரத்​நாயக்க ஆகியோர் தொடங்கிவைத்​தனர்.

இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்​தி​யத் தூதரகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “டிட்வா புய​லால் இலங்கை வடக்கு ரயில் பாதை​யின் சேதமடைந்த பகு​தி​களை மீட்​டெடுப்​ப​தற்கு இந்​திய நிதி உதவி உதவும். மேலும் இதன்​மூலம் அத்​யா​வசிய போக்​கு​வரத்து சேவை​கள் மீட்​டெடுக்​கப்​படும்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT