மதுரையில் நடந்த அரசு ஆய்வக நுட்புநர் சங்க விழாவில் எம்எல்ஏக்கள் வராததால் அதிருப்தி அடைந்து புறப்படத் தயாரான அமைச்சர் நிர்மல்குமார்.

 
தமிழகம்

எம்எல்ஏக்கள் வராததால் அரசு விழாவிலிருந்து வெளியேறிய அமைச்சர் நிர்மல்குமார் - மதுரையில் தவெக கோஷ்டி பூசல்?

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை​யில் அரசு ஆய்வக நுட்​புநர் சங்க விழாவுக்கு எம்​எல்​ஏக்​கள் வராத​தால் அமைச்​சர் நிர்​மல்​கு​மார் மேடையி​லிருந்து உடனடி​யாக வெளி​யேறி​னார். இதன்மூலம் மதுரை மாவட்​டத்​தில் தவெக​வில் நில​வும் கோஷ்டி பூசல் வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

மதுரை மருத்து​வக் கழக கூட்​டரங்​கில் அரசு ஆய்வக நுட்புநர் சங்​கம் சார்​பில் வெள்ளி விழா மலர் வெளி​யீட்டு விழா நேற்று நடை​பெற்​றது. இவ்​விழாவுக்​குச் சிறப்பு அழைப்​பாளர்​களாக மின்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மார், எம்​எல்​ஏக்​கள் கோபிசன், கல்​லாணை ஆகியோர் பங்​கேற்​ப​தாக அழைப்​பிதழில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இதன்​படி நேற்று காலை 10 மணிக்கு விழா தொடங்​க​விருந்த நிலை​யில் 10 நிமிடங்​களுக்கு முன்​பாகவே அமைச்​சர் நிர்​மல்​கு​மார் மேடைக்கு வந்​து​ விட்​டார். ஆனால், விழா மேடை​யில் எம்​எல்​ஏக்​கள் யாரும் இல்லாத​தால் அதிர்ச்​சி​யடைந்​தார். அதே​போன்று விழாவுக்கு குறைந்த எண்​ணிக்​கை​யிலேயே பார்​வை​யாளர்​களும் வந்​திருந்​தனர். இதனால் கோபமடைந்த அமைச்​சர், வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கச்செல்​வ​தாகக் கூறி​விட்டு அங்​கிருந்து புறப்​பட்​டார்.

பாஜக, அதி​முக கட்​சிகளில் பல்​வேறு பொறுப்​பு​களை வகித்​து​விட்டு தவெக​வுக்கு வந்த நிர்​மல்​கு​மாருக்கு அமைச்​சர் பதவி கொடுக்​கப்​பட்​டுள்​ளது.ஆனால், மதுரை மாவட்​டத்​தில் விஜய்​யின் ரசிகர் மன்​றம், மக்​கள் இயக்​கம் தொடங்​கிய காலம் முதல் உறுப்​பினர்​களாகச் செயல்​பட்ட எம்​எல்​ஏக்​களான தங்​கப்​பாண்​டியன், கோபிசன், கல்​லாணை ஆகியோ​ருக்கு அமைச்​சர் பதவி வழங்​கப்​ப​டாத​தால் அவர்​கள் அதிருப்​தி​யில் இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், தவெக கோஷ்டி பூசல் வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT