இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். தேர்வு அறைக்கு கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் எவை என்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தேர்வு மையத்தில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. படம்: பிடிஐ

 
தமிழகம்

தீவிர கண்காணிப்பு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று நீட் மறுதேர்வு

22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்

செய்திப்பிரிவு

சென்னை: இளநிலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் மறு​தேர்வு நாடு முழு​வதும் இன்று நடை​பெறுகிறது. 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் தேர்வை எழுதுகின்​றனர். இதையொட்​டி, பாது​காப்​பு, கண்​காணிப்பு நடவடிக்​கைகள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம் 1.30 மணிக்​குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பிறகு வருபவர்​கள் எக்​காரணம் கொண்​டும் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தேர்வு முடிவு​களை இந்த மாத இறு​திக்​குள் வெளி​யிட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் நீட் தேர்​வில் தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. அதே​போல, ராணுவக் கல்​லூரி​களில் உள்ள பிஎஸ்சி நர்​சிங் படிப்​புக்​கான மாணவர் சேர்க்​கைக்​கும் நீட் தேர்வு கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது.

நீட் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது. அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. விண்​ணப்​பித்​திருந்த 22.80 லட்​சம் பேரில் 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தேர்வு எழு​தினர்.

வினாத்தாள் கசிந்தது: இதற்​கிடையே, நீட் தேர்​வுக்​கான வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​தது உறுதி செய்​யப்​ பட்​ட​தால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்​திய அரசு ரத்து செய்​தது. வினாத்​தாள் கசிவுக்கு காரண​மானவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். நீட் மறு​தேர்வு ஜூன் 21-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, நீட் மறு​தேர்வு நாடு முழு​வதும் இன்று நடை​பெறுகிறது. நாடு முழு​வதும் மொத்​தம் 551 நகரங்​கள் மற்​றும் துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், சிங்​கப்​பூர் உட்பட 14 நாடு​கள் என சுமார் 5,500 மையங்​களில்நடை​பெறும் தேர்வை 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் எழுதுகின்றனர். தமிழகத்​தில் மட்​டும் 307 தேர்வு மையங்​களில் 1.42 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தேர்​வில் பங்​கேற்க உள்​ளனர்.

ஏற்​கெனவே வினாத்​தாள் கசிந்​துள்​ள​தால், மீண்​டும் அது​போன்ற சம்​பவம் நடை​பெறாமல் இருக்க பல்​வேறு பாது​காப்பு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. வினாத்​தாள்​கள் பாது​காப்​பான முறை​யில் தேர்வு மையங்​கள் உள்ள நகரங்​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளன. வினாத்​தாள்​களை கொண்டு செல்ல ஹெலி​காப்​டர்​களும் பயன்​படுத்​தப்​பட்​டன.

தேர்வு மையங்களில் சிசிடிவி: அதே​போல, அனைத்து நீட் தேர்வு மையங்​களை​யும் சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் கண்​காணிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. தேர்வு மையங்​களை கண்​காணிக்க ஒருங்​கிணைப்​பாளர்​கள், கண்​காணிப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். போலீ​ஸாரும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படு​கின்​றனர். நீட் மறு​தேர்வு பணி​களில் 2 லட்​சம் அலு​வலர்​கள் ஈடுபடுகின்​றனர்.

வழக்​க​மாக, நீட் தேர்வு பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 3 மணி நேரம் நடை​பெறும். நிர்​வாக நடை​முறை​களால் மாணவர்​களின் தேர்வு நேரம் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, இந்த முறை கூடு​தலாக 15 நிமிடங்​கள் தேர்வு நேரம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெறும்.

தேர்வு மையத்​துக்​குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்​களுக்கு அனு​மதி அளிக்​கப்​படும். தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம் 1.30 மணிக்​குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பிறகு வருபவர்​கள் எக்​காரணம் கொண்​டும் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தேர்வு அறைக்கு செல்​வதற்கு முன்பு மாணவர்​கள் மெட்​டல் டிடெக்​டர் மூலம் சோதனை செய்​யப்பட உள்​ளனர். ஆள்​மாறாட்ட மோசடியைத் தடுக்​கும் வகை​யில் ஆதார் அடிப்​படையி​லான பயோமெட்​ரிக் சோதனை​யும் கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது. மதம், கலாச்​சா​ரம் சார்ந்த ஆடைகள், மோதிரம், வளை​யல், கம்​மல், மூக்​குத்​தி, செயின், கண்​ணாடி, தாயத்​து, பெல்ட், அதிக உயரம் கொண்ட ஷூக்​கள், காலணி​கள் அணிந்து வரவும், செல்​போன், கால்​குலேட்​டர், ஸ்மார்ட் வாட்ச் உள்​ளிட்ட மின்​னணுக் கருவி​களை எடுத்து வரவும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

13 மொழிகளில் தேர்வு: நீட் தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடை​பெறுகிறது. இயற்​பியல், வேதி​யியல், உயி​ரியல் (தாவர​வியல், விலங்​கியல்) பாடங்​களில் தலா 50 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் கேட்​கப்​படும். அதில், 180 கேள்வி​களுக்கு பதில் அளிக்க வேண்​டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்​பெண் என மொத்​தம் 720 மதிப்​பெண்​கள் வழங்​கப்​படும். ஒரு தவறான பதி​லுக்கு 1 மதிப்​பெண் (நெகட்​டிவ்) குறைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. நீட் தேர்வு முடிவு​களை இம்மாத இறு​திக்​குள்​ வெளி​யிட தேசி​யத்​ தேர்​வு​கள்​ முகமை திட்​டமிட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT