மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். உடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர்.

 
தமிழகம்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி பெரும்​பான்​மை​யைப் பெற்று ஆட்சி அமைக்​கும் என மதுரை​யில் நடை​பெற்ற பாஜக ஆலோ​சனைக் கூட்​டத்​தில் மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் உறு​தி​யுடன் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை நாளை (மே 4) நடை​பெறு​வதை முன்​னிட்​டு, பாஜக வாக்கு எண்​ணிக்கை முகவர்​களுக்​கான ஆலோ​சனைக் கூட்​டம், மதுரை விமான நிலை​யம் பின்​புறம் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​துக்​கு, மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தலைமை வகித்​தார். மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் சிறப்பு அழைப்​பாள​ராகப் பங்​கேற்று கட்​சி​யினருக்கு ஆலோ​சனை வழங்​கி​னார்.

இக்​கூட்​டத்​தில், தென் மாவட்​டத்​தில் உள்ள 17 பாஜக வேட்​பாளர்​கள், வாக்கு எண்​ணிக்கை தலைமை முகவர்​கள், அனைத்து வாக்கு எண்​ணிக்கை முகவர்​கள் என 17 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களைச் சேர்ந்​தவர்​கள் பங்​கேற்​றனர். பின்​னர், மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேசிய ஜனநாயகக் கூட்​டணி உறு​தி​யான வெற்​றியை நோக்​கிச் சென்​று​கொண்​டிருக்​கிறது.

தமிழகத்​தின் வளர்ச்​சிக்​காக உழைக்​கக்​கூடிய, தமிழ் மக்​களின் பெருமை மற்​றும் கலாச்​சா​ரத்​தைப் பாது​காக்​கக்​கூடிய, பெண்​களின் நலன் மற்​றும் கண்​ணி​யத்தை உறுதி செய்​யக்​கூடிய ஒரு அரசாங்​கம் அமை​யும். இந்த வெற்​றி​யில் எனக்​குப் பெரிய நம்​பிக்கை உள்​ளது.

தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்​பாளர்​கள், அவர்​கள் தங்​களது வேலை​யைச் செய்​கின்​றனர். நாங்​கள் எங்​கள் வேலை​யைச் செய்​கிறோம். ஒட்​டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக் குடும்​ப​மும் மிகச்​சிறந்த பிரச்​சா​ரத்தை மேற்​கொண்​டது. நாம் ஒரு வசதி​யான பெரும்​பான்​மை​யைப் பெற்று ஆட்சி அமைப்​போம். இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​திருந்​தால், நான் டெல்​லியி​லிருந்து இவ்​வளவு தொலைவு வந்​திருக்க மாட்​டேன் என்​றார்.

மையத்​தில் சர்ச்சை: மதுரை விமான நிலை​யம் பின்​புறம் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் நேற்று முதுகலை மருத்​து​வப் படிப்பு மாணவர்​களுக்​கான நீட் தேர்வு நடை​பெற்​றது. இதே வளாகத்​தில், பாஜக கட்சி ஆலோ​சனைக் கூட்​டமும் நடை​பெற்​ற​தால், கல்​லூரி நிர்​வாகத்​திடம் மாணவர்​களின் பெற்​றோர் கடும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். இது​போன்ற கட்சி நிகழ்ச்​சிகளை நடத்த அரசு அனு​ம​தித்​திருப்​பது வேதனை அளிப்​ப​தாக பெற்​றோர்​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT