நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
திருநெல்வேலி: காவிரி நீர் பிரச்சினையை கவனிக்காமல் துறை அமைச்சரான புஸ்ஸி ஆனந்த், குதிரை பேரம் பேசுவதில் பிஸியாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கப்பட உள்ளது வரவேற்கத்தக்கது. கரூர் சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்பட்டவர் களைச் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும். விஜய் அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்ஒருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படும் நிலை உள்ளது.
விஜய்யின் நண்பர் ஜான் ஆரோக்கியசாமி போன்றோர்அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், காவிரிநீரை தமிழகத்துக்கு கொண்டு வருவது குறித்துஎந்த நடவடிக்கையும் எடுக்காமல், குதிரை பேரத்தில் பிஸியாக உள்ளார். தற்போது நடப்பதுபோன்ற மோசமான அரசியல் இதுவரைதமிழகத்தில் நடந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.