ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்து, தமிழக அரசின் செயல்பாடுகள், அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து மனு அளித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். உடன் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

 
தமிழகம்

அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை நியமிக்க ரூ.50 லட்சம் வரை லஞ்சம் கேட்கும் அமைச்சர் நிர்மல் குமார்: நயினார் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞர்​களை நியமிக்க ரூ.50 லட்​சம் வரை அமைச்​சர் நிர்​மல் குமார் லஞ்​சம் கேட்​ப​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

தமிழக பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், கிண்டி ஆளுநர் மாளி​கை​யில் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகரைச் சந்​தித்து மனு அளித்​தார். அதில், “கடந்த 21-ம் தேதி மதுரை​யில் நடை​பெற்ற மாரத்​தான் ஓட்​டப்​பந்​த​யத்​தில் பங்​கேற்ற சிறுமிகளிடம், உயர்​கல்​வித் துறை அமைச்​சர் விஸ்​வ​நாதன் முறையற்ற வகை​யில் நடந்து கொண்​ட​தான குற்​றச்சாட்​டு​கள் குறித்து உரிய விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும். விசா​ரணை நிறைவடை​யும்வரை அவரை அமைச்​சர் பொறுப்​பிலிருந்து இடைநீக்​கம் செய்ய வேண்​டும்.

கடந்த 5-ம் தேதி நடை​பெற்ற தமிழக அமைச்​சர​வைக் கூட்​டத்​தில், எவ்​வித அரசுப் பொறுப்​பிலும் இல்​லாத ஜான் ஆரோக்​கிய​சாமி மற்​றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்​கேற்​றுள்​ளனர். இது அரசி​யலமைப்​புச் சட்​டத்​துக்கு எதி​ரானது என்​ப​தால், இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து செய்​தி​யாளர்​களிடம் நயி​னார் நாகேந்​திரன் கூறிய​தாவது: தவெக ஆட்​சிப் பொறுப்​பேற்ற குறுகிய காலத்​தில் 151 பாலியல் வன்​கொடுமைச் சம்​பவங்​கள், 85-க்​கும் மேற்​பட்ட படு​கொலைகள், 80-க்​கும்மேற்​பட்ட போதைப்​பொருள் தொடர்​பான குற்​றங்​கள் நடந்​துள்​ளன. எதற்​கெடுத்​தா​லும் வெள்ளை அறிக்கை கொடுக்​கும் தவெக அரசு,இத்​தனை குற்​றச் சம்​பவங்​கள் நடந்​தும் இது​வரை என்ன அறிக்கை அளித்​துள்​ளது? குதிரை பேரம் மூல​மாகவே இந்த ஆட்சி அமைந்​திருக்​கிறது.

சட்​டத்​துறை அமைச்​சர் நிர்​மல்குமாருக்கு சட்​டம் தெரி​யுமா என்ற சந்​தேகம் எழுகிறது. திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்​றலாம் என நீதி​மன்​றமே உத்​தர​விட்​டும், அதைத் தடுப்​பது அமைச்​ச​ராக இருக்க அவருக்​குத் தகு​தி​யில்லை என்​பதை காட்​டு​கிறது. மேலும், அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞர்​களை நியமிக்க ரூ.5 லட்​சம் முதல் 50 லட்​சம் வரை அவர் லஞ்​சம் கேட்​கிறார்.

இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டம் 167-ன் படி, மத்​திய அரசின் பணி​களை ஆய்வு செய்​ய​வும், மாநிலத்​தின் பல்​வேறு இடங்​களுக்​குச் சென்று ஆய்வு நடத்​த​வும் ஆளுநருக்கு முழு அதி​காரம் உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT