நயினார் நாகேந்திரன்|கோப்புப் படம்

 
தமிழகம்

திமுக அரசின் ஊழல்கள் வெளிப்படுத்தப்படும்: நயினார் நாகேந்திரன் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: ‘​தி​முக அரசின் ஊழல்​கள் மக்​கள் மன்​றத்​தில் விரை​வில் வெளிப்​படுத்​தப்​படும்’ என்று என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதி​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு, ரூ.1,020 கோடி ஊழல் செய்​த​தாக அமலாக்​கத் துறை புகார் அளித்​ததைதொடர்ந்​து, தற்​போது ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்பு இயக்​குநரகம் விசா​ரணை நடத்த உத்​தர​விட்​டுள்​ளது. இதே துறை​யில் பணம் பெற்​றுக் கொண்டு அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகாரும் அமைச்​சர் நேரு மீது உள்​ளது.

மேலும், அமைச்சர்கள் துரை​முரு​கன், அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், காந்தி, முன்னாள் அமைச்சர்கள் பொன்​முடி, செந்​தில்​பாலாஜி மற்றும் மேயர் பிரியா மீதான ஊழல் மோசடிகளைக் கணக்​கிட்டால், பெரிய புத்​தகமே வெளி​யிடலாம்.

பூட்​டிக் கிடக்​கும் ஊழல்கள் அனைத்​தும் மக்​கள் மன்​றத்தில் விரை​வில் வெளிப்​படுத்​தப்படு​வது உறு​தி. எனவே, மீண்டும் அரியணை ஏறும் திமுகவின் எண்ணம் நிறைவேறாது.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT