தமிழகம்

“ஓய்வூதிய அறிவிப்பு திமுகவின் வாடிக்கையான ஏமாற்று வேலை” - நயினார் நாகேந்திரன், அன்புமணி விமர்சனம்

செய்திப்பிரிவு

திருச்சி / மதுரை: ஓய்​வூ​தி​யம் தொடர்​பான தமிழக அரசின் அறி​விப்பு திமுக​வின் ஏமாற்று வேலை என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: 2021 தேர்​தல் அறிக்​கை​யில் ஓய்​வூ​தி​யத் திட்ட அறி​விப்பு வெளி​யிடப்​பட்ட நிலை​யில், ஆட்சி முடி​யும் நேரத்​தில் அறி​விப்பு வெளி​யிட வேண்​டிய அவசி​யம் என்ன? இந்த அறி​விப்பு ஜாக்டோ ஜியோ அமைப்​பினரை ஏமாற்​று​வதற்​கான அறி​விப்பா அல்​லது பொது​மக்​களை ஏமாற்​று​வதற்​கான அறி​விப்​பா? ஆட்சி தொட​ராது என்று தெரிந்​தும் இந்த அறி​விப்பை வெளி​யிட்​டுள்​ளது, திமுக​வின் வாடிக்​கை​யான ஏமாற்று வேலை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

பலன்கள் கிடையாது: தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் சங்​கத்​தின் மாநில சிறப்​புத் தலை​வர் கு.​பாலசுப்​ரமணி​யன் மதுரை​யில் நேற்று கூறிய​தாவது: தமிழக அரசின் உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தின் பெயர் அறி​விப்​பில் கவர்ச்சி இருக்​கிறது. ஆனால், எந்​தப் பலன்​களும் இல்​லை. இத்​திட்​டத்தை நிபந்​தனை​யின்றி அனை​வருக்​கும் வழங்க வேண்​டும். சிறப்பு கால​முறை ஊதி​யம் பெறும் 4 லட்​சம் பணி​யாளர்​கள், தொகுப்​பூ​தி​யப் பணி​யாளர்​கள், அவுட்​சோர்​சிங் பணி​யாளர்​களுக்​கும் விரி​வாக்​கம் செய்ய வேண்​டும்.

பஞ்​சாப், ராஜஸ்​தான், மத்​திய பிரதேசம், டெல்​லி, இமாச்​சலப் பிரதேச மாநிலங்​கள் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தும்​போது, 11% வளர்ச்​சி​யடைந்த தமிழகத்​தில் அமல்​படுத்த முடி​யாதது ஏன்? இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஏமாற்று வேலை: ​பாமக தலை​வர் அன்​புமணி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை செயல்​படுத்​து​வதற்கு மாறாக, தேர்​தலை மனதில்​கொண்​டு, அரசு ஊழியர்​களை ஏமாற்​றும் நோக்​கில் தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை திமுக அரசு வெளி​யிட்​டுள்​ளது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT