தமிழகம்

கொலை வழக்கில் கைதான 17 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நாகை அமர்வு நீதிமன்ற தீர்ப்பு ரத்து

ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ​கொலை வழக்கில் கைதான 17 வயது சிறு​வனுக்கு ஆயுள் தண்​டனை விதித்து அமர்வு நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், வழக்கை இளஞ்​சிறார் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றி​யும் ரூ.1 லட்​சம் இழப்​பீடு வழங்க​வும் அரசுக்கு உத்​தர​விட்​டுள்​ளனர்.

மயி​லாடு​துறை​யில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த வன்​னியர் சங்க நிர்​வாகி கண்​ணன் கொலை வழக்​கில் 17 வயது சிறு​வனும் கைது செய்​யப்​பட்​டார். இந்தச் சிறுவனுக்கு எதி​ரான வழக்கை இளஞ்​சிறார் நீதி​மன்​றத்​துக்கு அனுப்​பாமல் மற்ற குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​களு​டன் சேர்த்து விசா​ரித்த நாகப்​பட்​டினம் அமர்வு நீதி​மன்​றம், சிறு​வனுக்​கும் ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது.

          

மேலும் அந்த சிறு​வனை நாகப்​பட்​டினம் இளஞ்​சிறார் சீர்​திருத்​தப்​பள்​ளி​யில் அடைக்க நீதி​மன்​றம் உத்​தர​விட்ட நிலை​யில், சிறு​வர் சீர்​திருத்​தப்​பள்ளி இல்லை எனக்​கூறி அந்த சிறு​வனை கடலூர் மத்​திய சிறை​யில் அடைத்​தனர். இந்​நிலையில் 17 வயது சிறு​வனுக்கு எதி​ரான இந்த வழக்கை நாகப்​பட்​டினம் அமர்வு நீதிமன்​றம் விசா​ரித்​தது தவறு என்​றும், கடலூர் மத்​திய சிறை​யில் அடைத்​தது அதை​விட தவறு என்​றும் கூறி சிறுவனின் தாயார் சவீதா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் அனிதா சுமந்த், சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்வு பிறப்​பித்த உத்​தர​வு: கொலைக்​குற்​றத்​தில் கைதான 18 வயது பூர்த்​தி​யடை​யாத சிறு​வன் மீதான வழக்கை மற்ற நபர்​களு​டன் சேர்த்து அமர்வு நீதி​மன்​றம் விசா​ரித்​தது சட்​டப்​படி தவறு. மேலும் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில் சிறு​வர் சீர்​திருத்​தப்​பள்​ளி​யில் சேர்க்​காமல், கடலூர் சிறை​யில் அடைத்தது சட்​ட​விரோதம்.

எனவே அந்​தச் சிறு​வனை குற்​ற​வாளி என அறி​வித்து ஆயுள் தண்​டனை விதித்து அமர்வு நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பு ரத்து செய்​யப்​படு​கிறது. இந்த வழக்கை மயி​லாடு​துறை சிறார் நீதி​மன்​றம் 6 மாதத்தில் விசா​ரித்து தீர்ப்​பளிக்க வேண்​டும். மேலும் அந்த சிறு​வனை சிறார் சீர்​திருத்​தப் பள்​ளி​யில் சேர்க்​காமல், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் முதல் கடலூர் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்​த​தால் அவருக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்​கப்​படு​கிறது. கடலூர் மத்​திய சிறை​யில் சட்​ட​ விரோதமாக அடைக்​கப்​பட்​டிருந்த அந்த சிறு​வனுக்கு ரூ.1 லட்​சத்தை தமிழக அரசு இழப்​பீ​டாக வழங்க வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT