தமிழகம்

வரைவு வாக்காளர் பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட இறந்த வாக்காளர்களின் பெயர்கள்: அதிர்ச்சியில் அகரமேல் ஊராட்சி பொதுமக்கள்

செய்திப்பிரிவு

பூந்தமல்லி: வாக்காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கு பிறகு வெளி​யிடப்​பட்​டுள்ள வரைவு வாக்காளர் பட்​டியலில், பூந்​தமல்லி அருகே அகரமேல் ஊராட்​சி​யில் இறந்த நூற்​றுக்​கும் மேற்​பட்ட வாக்காளர்களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ள​தால், பொது​மக்​கள் அதிர்ச்​சி​யடைந்​துள்​ளனர்.

கடந்த 19-ம் தேதி மாவட்ட வாரி​யாக வரைவு வாக்காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. திரு​வள்​ளூர் மாவட்ட தேர்​தல் அலு​வலரின் கீழ் உள்ள 10 சட்​டப்​பேரவை தொகு​தி​களில், இறந்த வாக்காளர்கள, இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் உள்​ளிட்ட 6, 19, 777 வாக்காளர்களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன.

இதில், திரு​வள்​ளூர் மாவட்​டம், பூந்​தமல்லி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் உள்ள பூந்​தமல்லி ஊராட்சி ஒன்​றி​யத்​துக்​குட்​பட்ட அகரமேல் ஊராட்​சி​யில் உள்ள 4 வாக்​குச் சாவடிகளின் வரைவு வாக்காளர் பட்​டியலில், 3,839 வாக்காளர்கள் உள்​ளனர்.

வாக்காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கு முன்​பு, இந்த 4 வாக்கு சாவடிகளின் வாக்காளர் பட்​டியலில் 3,997 வாக்காளர்கள் இடம் பெற்​றிருந்தனர். இந்த பட்​டியலில், இறந்​தவர்​களின் பெயர்​,ஒரே பெயரில் இரண்டு முறை பதிவு என 150-க்​கும் மேற்​பட்​டோர் பெயர்​கள் இருப்​ப​தாக முன்​னாள் மக்​கள் பிர​தி​நி​தி​கள் ஆதா​ரங்​களை வெளி​யிட்​டுள்​ளனர். இதுதொடர்​பாக மாவட்ட தேர்​தல் அலு​வல​ரான மாவட்ட ஆட்​சி​யர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என கோரி​க்கை வைத்​துள்ளனர்.

SCROLL FOR NEXT