சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள பல அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம்.

 
தமிழகம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்தம் வசதி தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்​து​மிட வசதி தொடங்​கப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​க​வும், பயணி​களின் வசதி​களை மேம்​படுத்​த​வும் முடி​யும் என, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றாக எழும்​பூர் ரயில் நிலையம் திகழ்​கிறது. நூற்​றாண்டை கடந்த இந்த ரயில் நிலை​யத்​தில் அடுத்த 50 ஆண்​டு​களில் ரயில்​கள் இயக்​கம், பயணி​கள் வருகை உள்​ளிட்​ட​வற்றை கருத்​தில் கொண்​டு, மறுசீரமைப்பு பணி ரூ.842 கோடி​யில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தொடங்​கப்பட்டது.

முதல்​கட்​ட​மாக, ரயில் நிலை​யத்​தின் உட்​பகு​தி​களில் நடைமேம்​பாலம், நடைமேடை விரி​வாக்​கம், மேற்​கூரை சீரமைப்பு உள்​ளிட்ட பணி​கள் முழு வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இந்த மேம்​பாட்டு பணி​யின் ஒரு பகு​தி​யாக, காந்தி - இர்​வின் சாலைப் பகு​தி​யில் அதிநவீன பல அடுக்கு வாகன நிறுத்​து​மிடம் வசதி பயன்​பாட்டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

இக்​கட்​டிடத்​தின், 2-வது மற்​றும் 3-வது தளங்​கள் தலா, 3,442.13 சதுர மீட்​டர் பரப்​பளவைக் கொண்​டுள்​ளன. இந்த இரண்டு தளங்​களி​லும் சேர்த்து மொத்​தம் 122 நான்கு சக்கர வாக​னங்​கள் மற்​றும் 68 இருசக்கர வாக​னங்​களை நிறுத்த முடி​யும்.

மேலும், 2,842.13 சதுர மீட்​டர் பரப்​பள​வில் அமைந்​துள்ள 4-வது தளம், 62 நான்கு சக்கர வாக​னங்​கள் மற்​றும் 34 இருசக்கர வாக​னங்​களும் நிறுத்த முடி​யும். இந்த வசதி​யி​னால் சாலை ஓரங்​களில் வாக​னங்​கள் நிறுத்​தப்​படு​வது குறைக்​கப்​பட்​டு, நிலை​யத்​தைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் போக்​கு​வரத்து தடை​யின்றி செல்ல முடி​யும்.

இந்த நவீன வாகன நிறுத்​து​மிடத்​தில் 22 மின்​சார வாகன சார்​ஜிங் நிலை​யங்​கள், 24 மணி நேர​மும் கண்​காணிக்​கும் ‘சிசிடி​வி’ கேம​ரா, தீயணைப்பு பாது​காப்பு உட்பட பல்​வேறு சிறப்​பம்​சங்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

பயணி​களின் வசதிக்​காகக் கட்​ட​ணக் கழிப்​பிடங்​கள், ஓட்​டுநர்​களுக்​கான ஓய்​வறை​கள், ஸ்மார்ட் லாக்​கர் வசதி​கள் உள்​ளிட்​டவை இடம் பெற்​றுள்​ளன.

இதே​போல, மற்​றொரு பல அடுக்கு வாகன நிறுத்​து​மிடம் பூந்​தமல்லி நெடுஞ்​சாலைப் பக்​கத்​தி​லும் தயா​ராகி வரு​கிறது. இது முழு​மையடை​யும் போது சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் வாகன நிறுத்​து​மிடத் திறன் பலமடங்கு அதி​கரிக்​கும் என, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT