தமிழகம்

தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழை பெய்யும்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் இன்று (டிச. 8) முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்​றில் வேக மாறு​பாடு நில​வு​கிறது.

இதன் காரண​மாக இன்​றும், நாளை​யும் ஓரிரு இடங்களிலும் புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். வரும் 10 முதல் 13-ம் தேதி வரை தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மானமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று (டிச.8) வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் லேசான மழை பெய்​யக்​கூடும்.

வட தமிழக கடலோரப் பகு​தி​களில் வரும் 9-ம் தேதி​யும், தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் 10-ம் தேதி​யும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்​தி​லும், இடை​யிடையே 55 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக புதுக்​கோட்டை மாவட்​டம் மீமிசலில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் ராம​நாத​புரம் மாவட்​டம் திரு​வா​டானை, நெல்லை மாவட்​டம் ஊத்து, காக்​காச்​சி, நாலு​முக்​கு, புதுக்​கோட்டை மாவட்​டம் ஆயிங்​குடி ஆகிய இடங்​களில் 3 செ.மீ.மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT