தமிழகம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரசாத லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி முறைகேடு

6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ​ராமேசுவரம் ராம​நாதசு​வாமி கோயி​லில் பிர​சாத லட்​டு​கள் வழங்​கிய​தில் ரூ.3 கோடியே 40 லட்​சத்து 65 ஆயிரம் வரை மோசடி நடந்​துள்​ளது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்து ஊழியர்​கள் 6 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

ராமேசுவரம் ராம​நாத​சுவாமி கோயிலுக்கு நாட்​டின் பல்​வேறு பகு​தி​களி​லிருந்​தும் தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​கின்​றனர்.

கடந்த 2023-24 நிதி​யாண்​டில் சட்​டப்​பேரவை மானியக் கோரிக்​கை​யில் பக்​தர்​களுக்கு தின​மும் இலவச லட்டு பிர​சாதம் வழங்​கத் திட்​டம் கொண்​டு​வரப்​பட்டு தற்​போது வரை ராமேசுவரம் கோயி​லில் நடை​முறை​யில் இருந்து வரு​கிறது.

இந்​நிலை​யில், இலவச லட்டு வழங்​கிய​தில் பெரும் மோசடி நடந்​துள்​ள​தாகப் புகார் எழுந்​தது. இது தொடர்​பாக கோயில் இணை ஆணை​யர் செல்​லத்​துரை தலை​மை​யில் கடந்த சில நாட்​களாக தீவிர விசா​ரணை நடந்​தது.

முறைகேடாக விற்பனை

இதில், கோயில் பிர​சாத தயாரிப்பு மற்​றும் விற்​பனைக்​குப் பொறுப்பு அதி​காரி​யாக இருந்த இளநிலை உதவி​யாளர் கே.பஞ்​சமூர்த்தி (பேஷ்​கார்) தினசரி பக்​தர்​களுக்கு இலவச​மாக வழங்​கப்​படும் லட்​டு​களின் எண்​ணிக்​கை​யைக் குறைத்து அதை முறை​கே​டாக விற்​பனை ஸ்டால்​களில் பக்​தர்​களிடம் விற்​பனை செய்​துள்​ளார்.

இதன் மூலம் சட்​ட​விரோத​மாக பணம் ஈட்​டியதும் தெரிய வந்​தது. மேலும், வெளி​யில் இருந்து தயாரிப்பு மூலப் பொருட்​களை மொத்​த​மாக கொள்​முதல் செய்து முறை​கே​டாக லட்டு தயாரித்து கவுன்ட்​டரில் விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளது.

2023 முதல் 2026 பிப்​ர​வரி வரையி​லான கால​கட்​டத்​தில் 11 லட்​சத்து 40 ஆயிரம் லட்​டு​கள் முறை​கே​டாக தயாரித்து கவுன்ட்​டரில் பக்​தர்​களிடம் பணத்​துக்கு விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால், ரூ.3 கோடியே 40 லட்​சத்து 65 ஆயிரம் மோசடி​யாக விற்​பனை நடந்​ததுள்​ள​தாக ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

இந்த மோசடி​யில் ஈடு​பட்ட ஊழியர்​களான இளநிலை உதவி​யாளர்​கள் (பேஷ்​கார்) பஞ்​சமூர்த்​தி, லாவண்​யா, அம்​பி​கா, டிக்​கெட் விற்​பனை​யாளர் செல்​வி, பணிப்​பெண் சிவனேஸ்​வரி, தூர்வை பணி​யாளர் விக்​ரம் உள்​ளிட்ட 6 பேர் தற்​காலிகப் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

பக்தர்கள் அதிர்ச்சி

மேலும், தற்​காலிகப் பணி​யாளர்​களான பிரபு ரவி, நித்​தி​யானந்​தம், பாலாஜி ஆகிய 3 பேரை பணி நீக்​கம் செய்து கோயில் இணை ஆணை​யர் செல்​லத்​துரை உத்​தர​விட்​டார். ராம​நாதசு​வாமி கோயி​லில் பிர​சாத லட்​டு​வில் கோடிக்​கணக்​கான ரூபாய் மோசடி நடந்​திருப்​பது பக்​தர்​கள்​ மத்​தி​யில்​ அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT