தமிழகம்

சித்தா பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது ஏமாற்றம்: அமைச்சர் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: சித்தா பல்கலைக்கழகம் மசோ​தாவுக்கு ஆளுநர் ஒப்​புதல் தராதது ஏமாற்​றம் அளிப்​ப​தாக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த்​தடுப்பு மருந்​துத்துறை இயக்​குநர் அலு​வல​கத்​தில் நேற்று 405 பகுதி சுகா​தார செவிலியர்​கள் மற்​றும் 117 வட்​டார சுகா​தார மேற்​பார்​வை​யாளர்​களுக்கு பதவி உயர்வு ஆணை​களை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார்.

பின்னர், அவர் செய்​தி​யாளர்களிடம் கூறிய​தாவது: இந்த அரசு பொறுப்​பேற்ற நாள் முதல் தற்​போது வரை 35,702 புதிய பணிநியமன ஆணை​கள்,43,375 பேருக்கு வெளிப்படைத் தன்மை​யுடன் பணியிட​மாறு​தல்கள் வழங்​கப்​பட்டுள்ளன.

இது​வரை 16,610 பேருக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்​கப்பட்​டுள்​ளன. இதுவரை மொத்தம் தற்போதைய ஆணைகளையும் சேர்த்து 1 லட்சத்து 12,945 பேர் பயன்​பெற்​றுள்ளனர்.

சித்தா மருத்​து​வத்​துக்கு பல்​கலைக்​கழகம் அமைப்​ப​தற்கு 25 ஏக்​கர் நிலம் மாதவரம் பால்​பண்ணை பகு​தி​யில் தேர்வு செய்​யப்​பட்டு பணி​கள் நடந்து வரு​கின்​றன.

இதற்​காக ரூ.2 கோடி​யில் அரும்​பாக்​கத்​தில் உள்ள சித்தா மருத்​து​வ​மனை​யில் அலு​வல​கம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. முன்​ன​தாக அரசு அனுப்பிய சித்தா பல்​கலைக்​ கழகம் தொடர்பான மசோ​தாவை இருப்​பிலேயே வைத்​திருந்து​விட்டு தற்​போது குடியரசுத் தலை​வருக்கு ஆளுநர் அனுப்பி இருப்​ப​தாக தெரி​கிறது.

ஆளுநரின் ஒப்​புதல் என்​பது இரண்​டாவது முறை​யாக ஏமாற்​றம் அளிக்​கிறது. தமிழர்​களின் பாரம்​பரிய சித்தா மருத்​து​வத்தை ஏன் ஆளுநர் வெறுக்​கிறார் என்று தெரிய​வில்​லை. இது உண்​மை​யிலேயே ஒட்​டுமொத்த தமிழர்​கள் வருத்​தப்​படு​கின்ற மிகப் பெரிய நிகழ்​வாகும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT