கோப்புப் படம்

 
தமிழகம்

காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்துடன் அமைச்சர் பேச்சு

திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் இன்று காத்​திருப்பு போராட்​டம் அறி​வித்த நிலை​யில் நேற்று சங்க நிர்​வாகி​களு​டன் அமைச்​சர் முத்​து​சாமி பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

பணிநிரந்​தரம், காலமுறை ஊதி​யம், ஓய்​வூ​தியம் உள்ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி இன்று (டிச.16) தலைமைசெயல​கம் முன்​பாக கால​வரையற்ற காத்​திருப்​புப் போராட்​டம் நடத்​தவுள்​ள​தாக தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர் சங்​கம் அறி​வித்​தது.

இந்​நிலை​யில் அச்​சங்க நிர்​வாகி​களு​டன் அமைச்​சர் முத்​து​சாமி நேற்று பேச்​சுவார்த்தை நடத்தினார். அப்​போது டாஸ்மாக் மேலாண் இயக்​குநர் விசாகன் மற்​றும் அதிகாரி​கள் இருந்​தனர். இதில் சங்க நிர்​வாகிகள் தங்​களின் கோரிக்​கைகள் நிறைவேற்ற வலி​யுறுத்​தினர். அப்​போது அமைச்​சர், தற்காலிக பணிநீக்​கம் செய்​யப்​பட்ட பணி​யாளர்​களுக்கு மீண்​டும் பணி வழங்​க​வும், ஏற்​கெனவே பணி வழங்​கிய பணியாளர்​கள் சம்பள பிடித்​தம் செய்​யக் கூடாது என மேலாண் இயக்குநரை அறிவுறுத்​தி​னார்.

மேலும் காலி பாட்​டில்கள் திரும்​பப் பெறும் திட்​டத்​தில் உள்ள பிரச்​சினை​களை களைய சங்​கங்​களு​டன் கலந்து பேச வேண்​டும், பி.ஓ.எஸ். மிஷின் பரிவர்த்​தனை​யில் இலக்கு நிர்​ண​யம் செய்​வதை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும், பணிநிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் குறித்து உள்​துறை செயலர், நிதித்​துறை செயலர் மற்​றும் தலைமை செயலர் கவனத்​துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

மேலும் அனைத்து சங்​கங்​களின் கோரிக்​கைகளை கேட்டு இறு​தி​யில் ஒரு​மித்த கருத்து அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்க இன்று தலைமை செயலகத்தில் நடக்கும் பேச்​சு​வார்த்​தைக்கு வர வேண்​டும் என்றார்.

இந்​நிலை​யில் டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கத்​தினர் ஏற்​கெனவே அறி​வித்த போராட்டத்தை வாபஸ் பெற​வில்லை என்​றும் திட்​ட​மிட்​டப்​படி பேரணி​யாகச் சென்று தலைமை செயல​கம் முன் காத்​திருப்பு போராட்டம் நடை​பெறும் என்​றும் இன்று பேச்​சு​வார்த்​தை​யில் தீர்வு ஏற்பட்டால் போராட்​டம் கைவிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT