அமைச்சர் அருண்ராஜ்

 
தமிழகம்

துணைவேந்தர் நியமனத்தில் விரைவில் தீர்வு: சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: சித்தா பல்​கலைக்​கழ​கம் அமைப்பது மற்றும் துணைவேந்​தர் நியமன விவ​காரங்​களில் விரை​வில் தீர்வு காணப்​படும் சுகா​தா​ரத் ​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார்.

சென்னை அரும்​பாக்​கத்​தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்​திய மருத்​து​வ​மனை வளாகத்​தில் ரூ.10 லட்​சம் மதிப்​பில் புதுப்​பிக்​கப்​பட்ட இந்​திய மருத்​துவ நலவாழ்வு சிகிச்சை மையத்தை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் நேற்று திறந்து வைத்​தார்.

அப்​போது, அவர் கூறிய​தாவது: இந்​திய மருத்​துவ நலவாழ்வு மையத்​தில் பொது​மக்​களுக்கு உடல் பரு​மன், உயர் ரத்த அழுத்​தம், வகை-2 நீரிழிவு நோய், மூட்டு தேய்​மானம், கழுத்து, இடுப்பு, முது​கெலும்பு பாதிப்​பு​கள், மன அழுத்​தம் சார்ந்த பிரச்​சினை​கள் உள்​ளிட்ட வாழ்க்​கை​முறை சார்ந்த நோய்​களுக்கு நலவாழ்வு மற்​றும் மீட்​டெடுப்பு என 16 வகை​யான சிகிச்​சைகள் குறைந்த கட்​ட​ணத்​தில் வழங்​கப்​படும்.

மையத்​தின் முக்​கிய சேவை​களாக நச்சு நீக்க சிகிச்​சை, நோய்த்​தடுப்பு மற்​றும் முன்​னெச்​சரிக்கை பரா​மரிப்​பு, புத்​துணர்வு சிகிச்​சை, நலவாழ்வை மேம்​படுத்​தும் சிகிச்​சைகள் வழங்​கப்​படு​கின்​றன.

செங்​கல்​பட்​டில் உள்ள சர்​வ​தேச யோகா - இயற்கை மருத்​துவ அறி​வியல் நிறு​வனத்​தில், 10 முதல் 15 நாட்​கள் வரை தங்கிஇயற்கை மருத்​துவ முறை​யில் சிகிச்சை பெறும் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. அவர்​களுக்கு உணவு போன்ற வசதி​களும் ஏற்​படுத்தி தரப்​படு​கிறது.

சித்த மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​கள், பணி​யாளர்​கள் பற்​றாக்​குறையை சரிசெய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்​கும். சித்தா பல்​கலைக்​கழ​கம் அமைப்பது மற்றும் துணைவேந்​தர் நியமனம் தொடர்​பான சட்ட விவ​காரங்​கள் நீதி​மன்​றத்​தில்​ நிலு​வை​யில்​ உள்​ளன. இதற்​கு விரை​வில்​ தீர்​வு​காணப்​படும்​ என்று தெரி​வித்​​தார்​.

SCROLL FOR NEXT