தமிழகம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜன.6-க்குள் நல்ல செய்தியை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ்

செய்திப்பிரிவு

திருச்சி: அரசு ஊழியர்​களுக்கு வரும் ஜன. 6-ம் தேதிக்​குள் முதல்​வர் நல்ல செய்​தியை தெரி​விப்​பார் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி கூறி​னார்.

திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மாணவர்​களின் புத்​துணர்ச்​சிக்​காகத்​தான் பள்​ளிக்கு விடு​முறை விடப்​படு​கிறது. எனவே, விடு​முறை நாட்​களில் சிறப்பு வகுப்​பு​களை நடத்​தக் கூடாது.

தனி​யார் பள்​ளி​கள் இதை கண்​டிப்​பாக கடைப்​பிடிக்க வேண்​டும். தனி​யார் பள்​ளி​களில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டுள்​ளோம்.

மத்​திய அரசு கல்​வி​யில் 20 நோக்​கங்​களை அடைய வேண்​டும் என்று கூறுகிறது. அதில் நாம் 19-ஐ அடைந்து விட்​டோம். கேரளா இருப​தை​யும் அடைந்​து​விட்​டது. ஆனால், இந்த இரு மாநிலங்​களுக்​குத்​தான் கல்வி நிதியை ஒதுக்​காமல் வஞ்​சித்து வரு​கிறார்​கள்.

கல்​வி​யிலும் அரசி​யல் செய்​வது வேதனை​யாக உள்​ளது. ஜாக்டோ ஜியோ அமைப்​பினர் ஜன. 6-ம் தேதி முதல் கால ​வரையற்ற போராட்​டம் நடத்த உள்​ள​தாகத் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தினோம். ஆனால் அவர்​கள் போராட்​டம் நடத்​து​வ​தில் உறு​தி​யாக உள்​ளனர். ஜன. 6-ம் தேதிக்​குள் அரசு ஊழியர்​களுக்கு நல்ல செய்​தியை நிச்​சய​மாக முதல்​வர் தெரி​விப்​பார். இவ்​வாறு அமைச்​சர் அன்பில் மகேஸ் பொய்​யா மொழி தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT