மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 881 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 836 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 881 கன அடியாக உயர்ந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 11,000 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட தண்ணீ்ர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
அணை நீர்மட்டம் 107.49 அடியிலிருந்து 106.82 அடியாகவும், நீர் இருப்பு 74.89 டிஎம்சியிலிருந்து 73.96 டிஎம்சியாகவும் சரிந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,500 கனஅடியாக குறைந்தது.