தமிழகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை நீடிப்பு

செய்திப்பிரிவு

மேட்டூர் / தருமபுரி: கர்​நாடக மாநிலம் கபினி அணை​யில் இருந்து திறக்​கப்​பட்ட உபரிநீர் மேட்​டூர் அணையை வந்​தடைந்​ததை தொடர்ந்​து, அணைக்​கான நீர்​மட்​டம் படிப்​படி​யாக அதி​கரித்து வரு​கிறது.

கேரளா மற்​றும் கர்​நாடக மாநிலங்​களில் பெய்து வரும் கனமழை​யால், கர்​நாட​கா​வில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்​டியது. இதையடுத்​து, அணை​யில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​பட்டு வரு​கிறது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 4,923 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 11,988 கனஅடி​யாக அதி​கரித்​தது. தொடர்ந்து நேற்று மாலை நீர்​வரத்து மேலும் உயர்ந்து விநாடிக்கு 18,905 கனஅடி​யாக பதி​வானது.

காவிரி கரையோர மக்​களின் குடிநீர் தேவைக்​காக மேட்​டூர் அணை​யில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி தண்​ணீர் திறந்து விடப்​பட்டு வரு​கிறது. அணை​யில் இருந்து வெளி​யேற்​றப்​படும் நீரின் அளவை​விட நீர்​வரத்து அதி​க​மாக இருப்​ப​தால், அணை​யின் நீர்​மட்​டம் உயரத் தொடங்​கி​யுள்​ளது. நேற்று மாலை நில​வரப்​படி, மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் 74.55 அடி​யாக​வும், நீர்இருப்பு 36.74 டிஎம்​சியாக​வும் இருந்​தது.

ஒகேனக்​கல்​லில்​... தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யாற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, நேற்று காலை 20 ஆயிரம் கனஅடி​யாக அதி​கரித்​தது. நீர்​வரத்து அதி​கரித்​துள்​ள​தால் சுற்​றுலாப் பயணி​களின் பாது​காப்பு கரு​தி, ஒகேனக்​கல் காவிரி​யாற்​றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்​வாகம் விதித்த தடை 2-வது நாளாக நேற்​றும் நீடித்​தது.

நீர்​வரத்து அதி​கரிப்​பால் பிர​தான அரு​வி, சினி ஃபால்ஸ் அருவி உள்​ளிட்ட பகு​தி​களில் தண்​ணீர் செந்​நிறத்​தில் ஆர்ப்​பரித்து கொட்​டு​கிறது.

வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் காவிரி கரையோரப் பகு​தி​களில் வரு​வாய்த் துறை, வனத்​துறை மற்​றும் காவல் துறை​யினர் தொடர்ந்து கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். மேலும், காவிரி கரையோர பகு​தி​களில் வசிக்​கும் மக்​கள் எச்​சரிக்​கை​யுடன் இருக்​கு​மாறு மாவட்ட நிர்​வாகம் சார்பில் தொடர்ந்து அறி​வுறுத்​தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT