தமிழகம்

மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: விசாரணையை செப்.22-க்கு தள்ளிவைத்தது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி / சென்னை: மேகமலை புலிகள் சரணால​யம் மற்​றும் பாது​காக்​கப்​பட்ட வனப்​பகு​தி​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​று​வது தொடர்​பான வழக்​கின் விசா​ரணையை செப்​.22-க்கு உச்சநீதி​மன்​றம் தள்​ளி​வைத்​தது.

மேகமலை மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள பாது​காக்​கப்​பட்ட வனப்​பகு​தி​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றக்​கோரி உச்ச நீதி​மன்​றம் தானாக முன்​வந்து பதிந்த வழக்​கு, மாஞ்​சோலை​யில் வசித்து வரும் மக்​களுக்கு மாற்று ஏற்​பாடு செய்​யக்​கோரி ஜான் கென்​னடி என்​பவர் தொடர்ந்த வழக்கு ஆகியவை உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது, இந்த வழக்​கில் நீதி​மன்​றத்​துக்கு உதவுவதற்கு நியமனம் செய்​யப்​பட்ட வழக்​கறிஞர் கே.பரமேஷ்வர் வேறு ஒரு வழக்​கில் வாதிட்டு வரு​வ​தால் இந்த வழக்கை தள்​ளிவைக்க வேண்​டும் என கோரப்​பட்​டது.

இதைஏற்ற நீதிப​திகள் மேகமலை தொடர்​பான வழக்கைசெப்​.22-க்கு தள்​ளி​வைத்​தனர். அப்​போது, கே.பரமேஷ்வர் தரப்பு வழக்​கறிஞர், மேகமலை வழக்கை அடுத்த வாரத்​தில் விசா​ரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை வைத்​தார். ஆனால் நீதிப​தி​கள், அடுத்த வாரம் வேறுபல வழக்​கு​கள் விசாரணைக்கு எடுக்​கப்பட உள்​ள​தால் மேகமலை வழக்கை 22-ம் தேதியே விசா​ரணைக்கு எடுக்க முடி​யும் என திட்​ட​வட்​ட​மாக கூறினர்.

முன்​ன​தாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​த​போது, மேகமலை புலிகள் சரணால​யம் மற்​றும் பாது​காக்​கப்​பட்ட வனப்​பகு​தி​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்ற வேண் டும். பஞ்சு தோட்​டங்​கள் முழு​மை​யாக அப்​புறப்​படுத்​தப்​பட்ட வேண்​டும்.

ஏனெனில் ஆக்​கிரமிப்​புக்​கான மிக முக்​கிய காரண​மானவர்​களே அந்​தத் தோட்ட உரிமை​யாளர்​கள் தான் எனவும், வன நிலங்​களை ஆக்​கிரமித்​துள்ள யாராக இருந்​தா​லும் அவர்​களின் கட்​டிடங்​களுக்​கான மின்​சா​ரம், நீர் இணைப்பு உள்​ளிட்​ட​வற்றை துண்​டிக்க வேண்​டும் என்றும் உத்​தர​விட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT