| படம்: ம.பிரபு|

 
தமிழகம்

மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது: 614 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை

சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்​வில் 7.5% உள் இடஒதுக்​கீட்​டில் 614 அரசுப் பள்ளி மாண​வர்​களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் வழங்​கி​னார்.

தமி​ழ​கத்​தில் உள்ள அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் மொத்​தம் 7,157 எம்​பிபிஎஸ் (இளநிலை மருத்​து​வம்) இடங்​களும், 1,383 பிடிஎஸ் (பல் மருத்​து​வம்) இடங்​களும் உள்​ளன. இந்த இடங்​களுக்கு மொத்​தம் 72,633 மாண​வர்​கள் விண்​ணப்​பித்​தனர்.

இந்நிலையில், சென்னை ஓமந்​தூ​ரார் அரசு பன்​னோக்கு மருத்​து​வ​மனை வளாகத்​தில் சிறப்பு பிரி​வினருக்​கான நேர்​முக கலந்தாய்வு நேற்று நடை​பெற்​றது. விளை​யாட்​டுப் பிரி​வில் விண்​ணப்​பித்த 280 பேரில், 13 எம்​பிபிஎஸ் மற்​றும் 2 பிடிஎஸ் இடங்​கள் நிரம்​பின.

முன்​னாள் ராணுவத்​தினரின் வாரிசுகள் பிரி​வில் 366 பேர் விண்​ணப்​பித்​த​தில், 10 எம்​பிபிஎஸ் மற்​றும் ஒரு பிடிஎஸ் இடம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. மாற்​றுத் திற​னாளி​கள் பிரி​வில் ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட 224 இடங்​களில், விண்​ணப்​பித்த 108 மாண​வர்​கள் அனை​வ​ருக்​கும் இடங்​கள் வழங்​கப்​பட்​டன.

அரசுப் பள்ளி மாண​வர்​களுக்​கான 7.5 சதவீத ஒதுக்​கீட்​டில் 3,806 மாண​வர்​கள் விண்​ணப்​பித்த நிலை​யில், தகுதி பெற்ற 614 பேருக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​கள் வழங்கப்​பட்​டன.

சேர்க்கை ஆணைகளை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் வழங்​கி​னார். சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த இரட்​டையர்​களான நிகில் ராம், நிக் ஷிதா ஆகி​யோர் ‘வுஷூ’ தற்​காப்​புக் கலை விளை​யாட்டு வீரர்​கள்.

இதில் நிகில் ராம் செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி​யிலும், நிக் ஷிதா சேலம் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யிலும் எம்​பிபிஎஸ் இடங்​களைப் பெற்​ற​னர்.

அதே​போல, நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யைச் சேர்ந்த 51 வயது சுரேஷ்கு​மார், தனது விடா​முயற்​சி​யால் நீட் தேர்​வில் வெற்றி பெற்​று, அரசு மருத்து​வக் கல்​லூரியில் எம்​பிபிஎஸ் சேர்க்கை பெற்​றுள்​ளார்.

34 ஆண்​டு​கள் கழித்து தனது மருத்​து​வக் கனவு நிறை​வேறிய​தாக அவர் மகிழ்ச்​சி​யுடன் தெரி​வித்​தார். இதற்​கிடையே, பொதுப் பிரி​வினருக்​கான ஆன்லைன் கலந்​தாய்வும் நேற்று மதி​யம் 12 மணிக்​கு தொடங்​கியது.

SCROLL FOR NEXT