தமிழகம்

உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களாக அறிவிப்பதா? - மார்க்சிஸ்ட், விசிக கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: உ​யிரோடு இருப்​பவர்​களை இறந்​தவர்​களாக அறி​வித்து எஸ்​.ஐ.ஆர். வாக்​குரிமையை பறித்​துள்​ள​தாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச்​செய​லா​ளர் பெ.சண்​முகம், விசிக தலை​வர் திரு​மாவளவன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

பெ.சண்​முகம்: வரைவு வாக்​காளர் பட்​டியலில் சுமார் 1 கோடி பேர் வாக்​காளர் பட்​டியலிலிருந்து நீக்​கப்​பட்​டிருக்​கிறார்​கள். மொத்​த​மாக நீக்​கப்​பட்ட பெயர்​களில் 66 லட்​சம் பேர் முகவரி அற்​றவர்​கள் அல்​லது காண முடி​யாதவர்​கள் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, 27 லட்​சம் பேர் இறந்​தவர்​களாக அறிவிக்​கப்​பட்​டிருக்​கிறார்​கள்.

மொத்த வாக்​காளர்​களில் 99 சதவீதம் பேருக்கு படிவம் கொடுக்​கப்​பட்​ட​தாக​வும் அதில் 99 சதவீதம் படிவங்​கள் திரும்ப பெறப்​பட்​டிருப்​ப​தாக​வும் தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​திருந்த நிலை​யில் இறந்​தவர் எண்​ணிக்கை முரண்​பா​டாக இருக்​கிறது.

உயிரோடு இருப்​பவர்​களை இறந்​தவர்​கள் என்று அறி​வித்​ததற்கு தேர்​தல் ஆணை​யம் தான் பொறுப்​பேற்க வேண்டும். எனவே, இவற்​றையெல்​லாம் கணக்​கில் கொண்டு தற்​போதைய எஸ்​ஐஆர் நடை​முறையை தேர்​தல் ஆணை​யம் நிறுத்தி வைக்க வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: தமிழகத்​தில் நீக்​கம் செய்​யப்​பட்​டுள்ள 97.37 லட்​சம் வாக்​காளர்​களில் இறந்து போனவர்​கள், இரு முறை பதி​வானவர்​கள் என்​ப​தைத் தவிர்த்து 66 லட்​சம் பேர் அவர​வர் முகவரி​யில் இல்லை எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அவர்​களு​டைய வாக்​கு​களைப் பட்​டியலிலிருந்து நீக்​கம் செய்​வது சட்​டத்​துக்​குப் புறம்​பான​தாகும். எனவே, இடமாற்​றம் செய்​யப்​பட்டு குறிப்​பிட்ட முகவரி​யில் இல்​லை​யென நீக்​கம் செய்​யப்​பட்​டுள்ள 66 லட்​சம் வாக்​காளர்​களை​யும் மீண்​டும் பட்​டியலில் இணைக்க வேண்​டும்.

இறந்து போனவர்​கள் எனத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளவர்​களில், பலர் உயிரோடிருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

பிஹாரை போன்று தமிழகத்​தி​லும் ஆட்​சி​யைப் பிடிக்​கலாமென பாஜக நினைத்​துக்​கொண்​டுள்​ளது. இந்த சதித் திட்​டத்தை முறியடிப்​ப​தற்கு அனைத்​துக் கட்​சிகளும் இன்​னபிற ஜனநாயக சக்​தி​களும் முன்​வர​வேண்​டும்​.

SCROLL FOR NEXT