தமிழகம்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு:

தெற்கு குஜ​ராத்​தில் இருந்து கர்​நாடகா வரை சராசரி கடல் மட்​டத்​தில் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. வடக்கு வங்​கக்​கடல் பகு​தி​கள், அதை ஒட்​டிய தெற்கு வங்​கதேசப் பகு​தி​களின் மேல் சுமார் 1.5 கிமீ உயரத்​தில் இருந்து 7.6 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது.

இதன் காரண​மாக, வடமேற்கு வங்​கக்​கடல், அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நாளை (ஜூலை 3) உரு​வாகக்​கூடும். இன்று (ஜூலை 2) தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​ல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

நேற்று அதி​கபட்​ச​மாக கோவை சின்​னக்​கல்​லாறில் 8 செ.மீ. வால்​பாறை​யில் 4 செ.மீ. மழை பெய்துள்ளதாக அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT