தமிழகம்

அமைச்சர் நிர்மல்குமார் குறித்த சர்ச்சை பேச்சு: ராசாவுக்கு தலைவர்கள் கண்டனம்

வார்த்தைகளை திரும்பப் பெற்றார்

செய்திப்பிரிவு

சென்னை: அமைச்​சர் நிர்​மல்​கு​மார் குறித்த ஆ.ரா​சா​வின் சர்ச்சை பேச்சுக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்த நிலை​யில், ஆ.ராசா வருத்​தம் தெரி​வித்​து, வார்த்​தைகளை திரும்​பப் பெற்​றார்.

முதல்​வர் விஜய்​யின் சட்​டப்​பேர​வைப் பேச்சைக் கண்​டித்து திமுக சார்​பில் சைதாப்​பேட்​டை​யில் நேற்று முன்​தினம் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இதில் பேசிய ஆ.ராசா முதல்​வர் விஜய்​யை​யும், அமைச்​சர் சிடிஆர் நிர்​மல்​கு​மாரை​யும் கடுமை​யாக விமர்​சனம் செய்​தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பியது.

இதுதொடர்​பாக திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி., “யா​காவா ராயினும் நாகாக்க காவாக்​கால் சோகாப்​பர் சொல்​லிழுக்​குப் பட்​டு” என்ற திருக்​குறளை பதி​விட்டு தனது மறை​முக அதிருப்​தி​யை​யும் கண்​டனத்​தை​யும் வெளிப்​படுத்​தி​னார்.

அமைச்​சர் சிடிஆர் நிர்​மல்​கு​மார்: ஊழல் மற்​றும் பொய்​கள் குறித்து கேள்வி எழும்​போதெல்​லாம் ஆபாச பேச்சை கையில் எடுப்​பது​தான் திமுக​வின் வாடிக்​கை​யாக உள்​ளது. தவெகவை எதிர்​கொள்ள திராணி​யின்றி நடத்​தும் இந்த ஆபாச நாடகங்​களுக்கு மக்​கள் முடிவுரை எழுது​வார்​கள்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர்: மக்​கள் தீர்ப்பை மதிக்​காமல் பொது மேடைகளில் முதல்​வரை ஒரு​மை​யில் இழி​வுபடுத்​து​வது, பெண்​களுக்கு எதி​ரான தொடர் அவம​திப்​பு​கள் என திமுக இன்று தனது நம்​பகத்​தன்​மையை இழந்து மூழ்​கும் கப்​பலாக மாறிக்​கொண்​டிருக்​கிறது.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்: திமுக​வினர் சிலர் தொடர்ந்து பெண்​களை கொச்​சைப்​படுத்தி பேசுவவதை எப்​படி திமுக தலை​வர் அமை​தி​யாக வேடிக்கை பார்க்​கி​றார்? பொது​வெளி​யில் பெண்​களை இழி​வுபடுத்தி பேசுபவர்களை அந்​தந்த கட்சி தலைமை கண்​டிக்க வேண்​டும்.

இதற்​கிடையே தனது பேச்​சுக்கு வருத்​தம் தெரி​வித்து ஆ.ராசா வெளி​யிட்ட விளக்​கத்​தில், “அவ்​வாறு பேசி​யது எனக்​கும் வருத்​தம் தான். என் வார்த்​தைகளை திரும்​பப் பெறு​வ​தில் எனக்கு தயக்​கமில்​லை” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT