நாகை அரு​கே​யுள்ள மகிழி கிராமத்​தில் மழைநீரில் மூழ்​கி​உள்ள தாளடி பயிரை காண்​பிக்​கும் விவ​சா​யிகள்.

 
தமிழகம்

நாகை அருகே வடி​கால் தூர் வாரப்​ப​டாத​தால் மழைநீரில் மூழ்​கிய 2,000 ஏக்​கர் தாளடி பயிர்​கள்

செய்திப்பிரிவு

நாகப்​பட்​டினம்: நாகை அருகே வடி​கால் கால்​வாய் தூர் வாரப்​ப​டாத​தால் 2,000 ஏக்​கர் தாளடி பயிர்​களை மழைநீர் சூழ்ந்​தது. இதனால் விவ​சா​யிகள் பெரிதும் வேதனை அடைந்​துள்​ளனர்.

நாகை மாவட்​டத்​தில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இதனால், கீழையூர் ஒன்​றி​யம் திருப்​பூண்​டி, கீழப்​பி​டாகை, காரப்​பி​டாகை, மகிழி உள்​ளிட்ட கிராமங்​களில் சாகுபடி செய்​யப்​பட்​டுள்ள, நடவு செய்த 2,000 ஏக்​கர் தாளடி நெற்​ப​யிர்​கள் மழைநீ​ரால் சூழப்​பட்​டுள்​ளன.

இந்​தப் பகு​தி​யில் ஓடும் வேதா​ரண்​யம் கால்​வாய் தூர் வாரப்​ப​டாத​தா​லும், ஆகா​யத் தாமரை அகற்​றப்​ப​டாத​தா​லும் மழைநீர் வடி​யாமல் வயல்​களில் தேங்​கி, 2,000 ஏக்​கரில் தாளடி பயிர்​கள் நீரில் மூழ்​கி​உள்​ளன.

ஒரு ஏக்​கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்​துள்ள நிலை​யில், தற்​போது வயல்​களில் மழைநீர் தேங்கி நெற்​ப​யிர்​களை சூழ்ந்​துள்​ள​தால் விவ​சா​யிகள் வேதனை அடைந்​துள்​ளனர்.

எனவே, பொதுப்​பணித் துறை அதி​காரி​கள் உடனடி​யாக வேதா​ரண்​யம் கால்​வாயை தூர் வாரி, ஆகா​யத் தாமரையை அகற்றி கால்​வா​யில் மழைநீர் விரை​வில் வடி​யும் வகை​யில் சீரமைக்க வேண்​டும் என்று அப்​பகுதி விவ​சா​யிகள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT