தமிழகம்

“கூட்டணிக் கட்சிகளுக்கு இப்படித்தான் எழுதிக் கொடுக்கிறாரா ஸ்டாலின்?” - எல்.முருகன் கேள்வி

செய்திப்பிரிவு

“தமிழக முதல்​வர் ஸ்டா​லினுக்கு நல்ல புத்​தியை தர வேண்​டும் என திருப்​பரங்​குன்​றம் முரு​கனை வேண்​டிக்​கொண்​ட​தாக பாஜக எழு​திக் கொடுக்​கும் அறிக்​கையை அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அவரது லெட்​டர் பேடில் வெளி​யிடு​வ​தாகச் சொல்​லும் முதல்​வர் ஸ்டா​லின், அவருடைய கூட்​டணி கட்​சிகளுக்கு இப்​படித் தான் எழு​திக் கொடுக்​கி​றா​ரா?” என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கேள்வி எழுப்​பி​னார்.

மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் நேற்று சாமி தரிசனம் செய்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருப்​பரங்​குன்​றம் முரு​கனை தரிசித்து நாட்​டில் அனை​வ​ரும் நன்​றாக இருக்க வேண்​டும் என வேண்​டினேன். தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு நல்ல புத்​தியை தர வேண்​டும் என வேண்​டினேன். திருப்​பரங்​குன்​றம் மலை​யில் கார்த்​திகை தீபம் ஏற்ற முருக பக்​தர்​கள் கடந்த 45 ஆண்​டு​களாக முயன்று வரு​கின்​ற​னர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்து வரு​கின்​ற​னர்.

உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் மலை உச்​சி​யில் தீபம் ஏற்​றப்​பட​வில்​லை. தமி​ழ​கத்​தில் அராஜகம் நடை​பெறுகிறது. நீதி​மன்ற தீர்ப்பை நிறை​வேற்​று​வ​தில் முதல்​வர் ஸ்டா​லின் ஒருதலைபட்​ச​மாக நடந்து கொண்டு வரு​கி​றார். இதனால் உலகம் முழு​வதும் உள்ள முருக பக்​தர்​கள் திமுக அரசு மீது கோபத்​தில் உள்​ளனர். தீர்ப்பு வழங்​கிய நீதிப​தியை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும் என நாடாளு​மன்​றத்​தில் தீர்​மானம் கொண்டு வந்​துள்​ளனர். இது கேலிகூத்​தாக உள்​ளது. இதற்​காக தமிழக மக்​களிடம் முதல்​வர் ஸ்டா​லின் மன்​னிப்​புக் கேட்க வேண்​டும்.

திமுக-வை வீட்​டுக்கு அனுப்ப இன்​னும் 2 மாதங்​களே உள்​ளன. தமி​ழ​கத்​தில் சட்​டம் - ஒழுங்கு சரி​யில்​லை. திரு​மாவளவன் பாஜக கூட்​ட​ணி​யில் எம்​எல்ஏ ஆனவர். இன்று திமுக கூட்​ட​ணி​யில் உள்​ளார். மனசாட்சி வழி தான் பேசுகி​றோமா என்​பதை அவர் மனதை தொட்​டுச் சொல்ல வேண்​டும். தீபம் ஏற்​றப் போராடிய பாஜக மாநிலத் தலை​வர் மற்​றும் நிர்​வாகி​களை போலீ​ஸார் கைது செய்​தனர். இதை திரு​மாவளவன் கண்​டிக்​க​வில்​லை. மாற்று மத​மாக இருந்​தால் கேட்​டிருப்​பார். கடவுளிடம் விளை​யாடிய​வர்​கள் உருப்​பட்​ட​தாக சரித்​திரம் இல்​லை.

ஆர்​எஸ்​எஸ் நூறாண்​டு​கள் கடந்து மக்​கள் சேவை​யாற்​றும் சிறப்​பான அமைப்​பு. ஆர்​எஸ்​எஸ் போல் எந்த அமைப்​பும் சேவை​யாற்​றியது இல்​லை. அப்​படிப்​பட்ட அமைப்பை அல்​கொய்தா உடன் ஒப்​பிட்டு காங்​கிரஸ் எம்​பி-​யான மாணிக்​கம் தாகூர் பேசி​யதைக் கண்​டிக்​கிறேன். பாஜக எழு​திக் கொடுக்​கும் அறிக்​கையை அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அவரது லெட்​டர் பேடில் வெளி​யிடு​வ​தாக தமிழக முதல்​வர் விமர்​சனம் செய்​துள்​ளார். ஸ்டா​லின் அவருடைய கூட்​டணி கட்​சிகளுக்கு இப்​படித் தான் எழு​திக் கொடுக்​கி​றாரா எனக் கேட்​கிறேன்.

கடவுள் முரு​கன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுடன் உள்​ள​தாக அறநிலை​யத்​துறை அமைச்​சர் கூறி​யுள்​ளார். “முரு​கன் என் கூடத் தான் இருக்​கி​றார், திருப்​பரங்​குன்​றத்​தில் மிகப்​பெரிய அநீதி இழைத்​திருக்​கிறேன், அதனால் மன்​னிப்​புக் கேட்​கிறேன்” என்று முதல்​வர் ஸ்டா​லினை சொல்​லச் சொல்​லுங்​கள் பார்க்​கலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT