கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு அரசு நிலம் தொடர்பாக தடை மனுவை மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டி பொதுமக்களும், பாமகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
தமிழகம்

தடை மனுவையும் மீறி அரசு நிலம் பத்திரப் பதிவு? - கேளம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை

பாமகவினர், காயார் கிராம மக்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

கேளம்பாக்கம்: அரசு நிலத்தை பத்​திரப்​ப​திவு செய்​யக் கூடாது என்று தடை மனு அளித்​திருந்த நிலை​யிலும், மீண்​டும் பத்​திரப்​ப​திவு நடை​பெற்​ற​தாகக் கூறி, கேளம்​பாக்​கம் சார்​ப​தி​வாளர் அலு​வல​கம் முன்பு பொது​மக்​களும், பாமக​வினரும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

வண்​டலூர் அருகே காயார் ஊராட்​சிக்கு உட்​பட்ட சோழ​வந்​தாங்​கல் கிராமத்​தில் களம்​புறம்​போக்கு, தரிசு வகை​யைச் சேர்ந்த அரசு நிலம் உள்​ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்​கள் மூலம் சிலர் தனி​யார் பெயருக்கு பத்​திரப்​ப​திவு செய்​துள்​ள​தாக அப்பகுதி மக்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர்.

இதுகுறித்து ஆட்​சி​யர், வரு​வாய்த் துறை அதி​காரி​கள் உள்​ளிட்​டோரிடம் கிராம மக்​கள் புகார் மனு அளித்​திருந்​தனர். மேலும், அந்த நிலம் தொடர்​பாக வேறு எந்​தப் பத்​திரப்​ப​தி​வும் மேற்​கொள்​ளக் கூடாது எனக் கோரி, கேளம்​பாக்​கம் சார்​ப​தி​வாளர் அலு​வல​கத்​தி​லும் தடை மனு தாக்​கல் செய்​திருந்​த​தாக கூறப்​படு​கிறது.

இந்த நிலை​யில், தடை மனு நிலு​வை​யில் இருந்​த​போதும் அதே நிலம் தொடர்​பாக மீண்​டும் பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​ட​தாக தகவல் வெளி​யானது. இதனால் அதிருப்​தி​யடைந்த காயார் கிராம பொது​மக்​கள் மற்​றும் பாமக​வினர் 100-க்​கும் மேற்​பட்​டோர் நேற்​று, கேளம்​பாக்​கம் சார்​ப​தி​வாளர் அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டு, அலு​வலக நுழை​வா​யில் முன்பு தரையில் அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தகவலறிந்த தாழம்​பூர் காவல் ஆய்​வாளர் பிர​வீன் ராஜேஷ், கேளம்​பாக்​கம் காவல் ஆய்​வாளர் தமிழன்​பன், மகளிர் காவல் ஆய்​வாளர் கோம​தி, போலீ​ஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

தாழம்​பூர் காவல் ஆய்​வாளர், மாவட்ட சார்​ப​தி​வாளர் அலு​வலரிடம் தொலைபேசி​யில் தொடர்​பு​கொண்டு நிலை​மையை விளக்​கி​னார். இதுதொடர்​பாக உரிய விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்​கப்​படும் என அதி​காரி​கள் உறு​தி​யளித்​ததைத் தொடர்ந்​து, போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள்​ கலைந்​து சென்​றனர்​.

SCROLL FOR NEXT