சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுக அனைத்து விசைப்படகு மீனவர் சங்க சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் விஜேஷ் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர் மாவட்ட விசைப்படகுகளை ஆந்திர அரசு சிறை பிடித்து விடுவிக்கவில்லை.
தமிழக அரசு மற்றும் மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால், ஆந்திர மாநில கடல் உணவுகள், பிற மீன் வகைகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும்.
புதுச்சேரி, காரைக்கால் யூனியன் பிரதேச விசைப்படகுகள் அதிககுதிரை திறன் கொண்ட இன்ஜின் பொருத்தி, தொடர்ந்து ஆந்திர, தமிழக கடலோர பகுதிகளில் அத்துமீறி மீன் பிடிப்பதால் ஆந்திரா, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
அதனால் இது தொடர்பாக முதல்வர் விஜய், புதுச்சேரி மாநில அரசுடன் பேசி அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.