தமிழகம்

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்: 2-வது நாளாக போலீஸாரிடம் சிபிஐ விசாரணை

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக 2-வது நாளாக 2 காவல் ஆய்​வாளர்​கள், 3 பெண் உதவி ஆய்​வாளர்​களிடம் விசா​ரணை நடை​பெற்​றது.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இதுதொடர்​பாக கடந்த அக்​டோபர் முதல் கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் தங்கி சிபிஐ அதி​காரி​கள் பல்​வேறு தரப்​பினரிடம் விசா​ரணை நடத்தி வந்​தனர். டெல்​லி​யில் நடை​பெற்ற சிபிஐ விசா​ரணை​யில், தவெக தலை​வரும் தற்​போதைய முதல்​வரு​மான விஜய், முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​பாலாஜி உள்​ளிட்​டோரும் ஆஜராகினர்.

இதைத் தொடர்ந்​து, தேர்​தல் அறி​விப்​புக்கு முன்பு மார்ச் முதல் வாரத்​தில் விசா​ரணை தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், 3 மாதங்​களுக்​குப் பிறகு தற்​போது மீண்​டும் விசா​ரணை தொடங்​கி​யுள்​ளது. சம்​பவம் நடை​பெற்​ற​போது பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த காவல் ஆய்​வாளர் சையது அலி, உதவி ஆய்​வாளர் ரமேஷ் உள்​ளிட்ட 10 போலீ​ஸார் நேற்று முன்​தினம் சிபிஐ விசா​ரணைக்கு ஆஜராகினர்.

2-வது நாளாக நேற்று சம்​பவத்​தின்​போது பசுப​தி​பாளை​யம் காவல் ஆய்​வாள​ராக இருந்த சதீஷ்கு​மார், கரூர் நகர காவல் நிலைய ஆய்​வாள​ராக இருந்த மணிவண்​ணன் மற்​றும் ஆர்த்தி உள்​ளிட்ட 3 உதவி ஆய்​வாளர்​கள் ஆகியோரிடம் சிபிஐ இன்​ஸ்​பெக்​டர் மணிவண்​ணன் நேற்று விசா​ரணை நடத்​தி​னார். இதில், கரூர் நகர காவல் ஆய்​வாள​ராக இருந்த மணிவண்​ணனிடம் ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக விசா​ரணை நடை​பெற்​றது. இவர், கரூர், டெல்லி என சிபிஐ வி​சா​ரணைக்கு 10-க்​கும்​ அதி​க​மான முறை ஆஜராகியுள்​ளார்​.

SCROLL FOR NEXT