கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ கண்காணிப்பு குழு முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு வந்த மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல். | படம்: எம்.மூர்த்தி |

 
தமிழகம்

41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ கண்காணிப்புக் குழு முன் கரூர் ஆட்சியர், ஐ.ஜி., எஸ்.பி. ஆஜர்

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக உச்ச நீதி​மன்ற ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மையி​லான கண்​காணிப்​புக் குழு முன்பு மாவட்ட ஆட்​சி​யர், ஐ.ஜி., எஸ்​.பி. மற்​றும் டிஎஸ்பி உள்​ளிட்​டோர் நேற்று ஆஜராகி விளக்​கம் அளித்​தனர்.

கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில், சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இந்த வழக்​கில், உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினர், நெரிசலில் சிக்கி காயமடைந்​தவர்​கள், பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த போலீ​ஸார், பல்​வேறு துறை அதி​காரி​கள், வேலு​சாமிபுரத்​தில் கடை வைத்​துள்ள வியா​பாரி​கள் என பல்​வேறு தரப்​பினரிடம் சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

இதனிடையே, சிபிஐ விசா​ரணையை மேற்​பார்வை செய்ய உச்ச நீதி​மன்​றத்​தால் நியமிக்​கப்​பட்ட, ஓய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி, ஏடிஜிபி-க்​கள் சோனல் வி.மிஸ்​ரா, சுமித் சரண் ஆகியோர் அடங்​கிய குழு​வினர் நேற்று கரூருக்கு வந்​தனர்.

இந்​தக் குழு​வினர் முன்பு மாவட்ட ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் ஆஜராகி, சம்​பவம் குறித்து 3 மணி நேரம் விளக்​கம் அளித்​தார். தொடர்ந்​து, மத்​திய மண்டல ஐ.ஜி.ஜோஷி நிர்​மல்​கு​மார், எஸ்​.பி ஜோஷ் தங்​கை​யா, டிஎஸ்பி செல்​வ​ராஜ், காவல் ஆய்​வாளர் மணிவண்​ணன் ஆகியோ​ரும் ஆஜராகி

2 மணி நேரம் விளக்​கம் அளித்​தனர். தொடர்ந்​து, கூட்ட நெரிசலில் இரு பெண் குழந்​தைகளை பறிக்​கொடுத்த பெரு​மாள்- செல்​வ​ராணி தம்​ப​தி​யினர் விசா​ரணைக்கு ஆஜரா​னார்​கள்.

குழு​வினரிடம் மனு​... இதே​போல, கொங்குநாடு மக்​கள் தேசி​யக் கட்சி (தனியரசு) இளைஞர் பேரவை மாவட்​டச் செய​லா​ளர் அருள்​கு​மார் மற்​றும் கரூர் அமராவதி வியா​பாரி​கள் நலச் சங்​கத்​தினர், கரூர் நகர உணவுப் பொருள் வணி​கர்​கள் சங்​கத்​தினர் உள்​ளிட்​டோர் குழு​வினரிடம் அளித்த மனு​வில், "பிரச்​சா​ரத்​துக்கு விஜய் கால​தாமத​மாக வந்​த​தால்​தான் கூட்ட நெரிசல் ஏற்​பட்டு உயி​ரிழப்​பு​கள் நேரிட்​ட​தாக​வும், இதற்கு காரண​மான விஜய் உள்​ளிட்​டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் தெரி​வித்​திருந்தனர்.

இதே​போல, தவெக தரப்​பில் கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன் மனைவி ராணி மற்​றும் பாதிக்​கப்​பட்ட 2 பெண்​கள் உள்​ளிட்​டோர் குழு முன்பு ஆஜராகி, தங்​கள் தரப்பு விளக்​கத்தை அளித்​தனர். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வரு​கை​யையொட்டி கரூர் சுற்​றுலா மாளி​கை​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது. இன்​றும்​ வி​சா​ரணை தொடரும்​ என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT