ஆதவ் அர்ஜுனா

 
தமிழகம்

கரூர் சம்பவம் குறித்து பேச்சு: அமைச்சர் மீது நடவடிக்கை கோரிய புகார் மனு சிபிஐக்கு அனுப்பிவைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கரூர் உயிழப்பு சம்​பவம் குறித்து அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா பேசி​யதற்கு எதி​ராக திமுக அமைப்​புச்​செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி அளித்த புகார் மனுவை சிபிஐ-​யின் பரிசீலனைக்கு கரூர் வழக்கை மேற்​பார்​வை​யிட்டு வரும் குழு தலை​வ​ரான ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி அனுப்பி வைத்​துள்​ளார்.

கரூர் மாவட்​டம் வேலுச்​சாமிபுரத்​தில் கடந்​தாண்டு செப்​டம்​பரில் விஜய் பங்​கேற்ற அரசி​யல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 140-க்​கும் மேற்​பட்​டோர் படு​காயமடைந்​தனர். இந்த விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி சி.பி.ஐ அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர். மேலும் அந்த வழக்கை உச்ச நீதி​மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலைையி​லான குழு மேற்​பார்​வை​யிட்டு வரு​கிறது.

இதனிடையே கரூர் சம்​பவம் தொடர்​பாக அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா பொது​வெளி​யில் சர்ச்​சைக்​குரிய வகை​யில், கரூரில் எங்​களுக்கு ஒரு கணக்கு உள்​ளது, அதை முடிக்​காமல் விட​மாட்​டோம் என தெரி​வித்​துள்​ள​தாக கூறி, திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி உச்ச நீதி​மன்​றத்​தில் இடை​யீட்டு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், முதல்​வரை குற்​றம்​சாட்​டப்​பட்ட நபராக கூறியதற்கு உச்​சநீ​தி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்து வழக்கை வாபஸ் பெற உத்​தர​விட்​டது. அத்​துடன் இந்த வழக்​கில் சரி​யான கோரிக்​கை​யுடன் மனுவை தாக்​கல் செய்து நிவாரணம் பெறலாம் என திமுக​வுக்கு உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யிருந்​தது.

இதைத் தொடர்ந்து கரூர் விவ​காரம் தொடர்​பாக​வும், அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா பேச்சு தொடர்​பாக​வும் உரிய நடவடிக்கை எடுக்​கக்​கோரி சி.பி.ஐ இயக்​குநருக்கு ஆர்​.எஸ். பாரதி ஒரு புகார் மனு அளித்​திருந்​தார். அதே​போல் கரூர் வழக்கை கண்​காணிக்​கும் உச்ச நீதி​மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி​யிட​மும் ஒரு புகார் மனுவை கடந்த 7-ம் தேதி ஆர்​.எஸ்​.​பாரதி வழங்​கி​யிருந்​தார்.இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி அஜய் ரஸ்​தோகி, அந்த மனுவை சிபிஐ-க்​கு அனுப்​பி வைத்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT