தமிழகம்

சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தருமபுரி தொகுதி பாமக எம்எல்ஏவான சவுமியா அன்புமணி, சட்டப்பேரவையில் தனது தொகுதி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் காவிரி நீர் விவகாரம், மேகேதாட்டு அணை, மதுவிலக்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசுவது கவனத்தை பெற்றுவருகிறது.

சமூக வலைதளங் களிலும் வைரலாகின்றன. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ்தள பதிவில், ‘‘அருமை.. சட்டப்பேரவையில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் சகோதரி சவுமியா அன்புமணியை பாராட்டுகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT