தமிழகம்

தவெக என்ற கானல் நீர் காணாமல் போய்விடும்: கடம்பூர் ராஜூ கருத்து

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: ‘தமிழக வெற்​றிக் கழகம் எனும் கானல் நீர் விரை​வில் காணாமல்விடும்’ என்று முன்​னாள் அமைச்​சர் கடம்​பூர் ராஜூ தெரி​வித்​தார். தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்​தி​குளம் தொகுதி தவெக பொறுப்​பாளர் பிர​வீன் தலை​மையி​லான கட்​சி​யினர், வடக்கு மாவட்ட அதி​முக செய​லா​ளர் கடம்​பூர் ராஜூ எம்​எல்ஏ முன்​னிலை​யில் அதி​முக​வில் இணைந்​தனர்.

அதைத்​தொடர்ந்​து, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் திமுக​வுக்கு மாற்று என்​றால் அதி​முக​தான். இந்த தேர்​தலிலும் அந்த நிலை​தான் உள்​ளது. புதி​தாக கட்சி தொடங்​கிய​வர்​கள், ‘எங்​களுக்​கும், திமுக​வுக்​கும் தான் போட்​டி’ என்று கூறு​வது, அவர்​களில் யார் எதிர்க்​கட்​சி​யாக வரப்​போகின்​றனர் என்​ப​தாக இருக்​கும்.

          

அதி​முக வெற்றி பெறுவது நிச்​ச​யம். தமிழக வெற்​றிக் கழகம் வெறும் கானல் நீர் தான். வெயில் காலம் தொடங்​கி​விட்​டது. இச்​சம​யத்​தில் தென்​படும் கானல் நீர்சில நிமிடங்​களில் காணாமல் போய் ​விடும். இந்த உண்​மை​யைப் புரிந்​து​கொண்​டு, வெற்றி பெறப்​போகும் அதி​முக​வுக்கு விளாத்​தி​குளத்​தைச் சேர்ந்த தவெகவினர் வந்​துள்​ளனர்.

திமுக கூட்​ட​ணி​யில் யாரும் திருப்​தி​யாக இல்​லை. திமுக - காங்​கிரஸ் இடையே இருந்த புகைச்​சல் தற்​போது தீப்​பிடிக்க தொடங்கி உள்​ளது. பாமக உள்ளே வந்​தால் நாங்​கள் வெளியே செல்​வோம் என விசிக தலை​வர் கண்​டிஷன் போட்​டுள்​ளார்.

ஆனால், அதி​முக கூட்​டணி நாளுக்கு நாள் மெரு​கேறி வரு​கிறது. எங்​கள் கூட்​ட​ணி​யின் ஒரே நோக்​கம் மக்​களைத் துன்​பப்​படுத்​தி, ஏமாற்​றிய திமுக ஆட்​சியை அகற்ற வேண்​டும் என்​பது மட்​டும்​தான். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT