தமிழகம்

நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியமில்லை: ‘கருப்பு’ பட வழக்கில் நீதிபதிகள் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ‘நீ​தித் துறை​யில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடி​யாது; அதே​போல நீதிப​தி​களை புனிதர்​களாகச் சித்​தரிக்க வேண்​டிய அவசி​ய​மும் இல்​லை’ என்று கருப்பு படத்​துக்கு தடை கோரிய வழக்கை தள்​ளு​படி செய்​து, சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

‘நடிகரும், இயக்​குநரு​மான ஆர்​.ஜே.​பாலாஜி இயக்​கத்​தில் நடிகர் சூர்​யா, நடிகை த்ரிஷா நடித்து சமீபத்​தில் வெளிவந்​துள்ள ‘கருப்​பு’ திரைப்​படத்​தில் நீதித் ​துறையை​யும், நீதிப​தி​களை​யும் அவம​திக்​கும் வகை​யில் காட்​சிகள் எடுக்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​படத்​துக்கு தடை விதிக்க வேண்​டும்’ எனக் கோரி கோடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஆர்​.எஸ்​.தமிழ்​வேந்​தன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை தள்​ளு​படி செய்து நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: ‘கருப்பு’ திரைப்​படத்​தின் கதைக்​களம் முழுக்க, முழுக்க நீதித்​துறை​யின் செயல்​பாடு​களை மைய​மாக வைத்து எடுக்​கப்​பட்​டுள்​ளது.

அப்​படத்​தில் வரும் நீதிபதி ஊழல்​வா​தி​யாக​வும், செல்​வாக்​குமிக்க வழக்​கறிஞர் நீதி​மன்ற நடை​முறை​களில் அதீத அதி​காரம் செலுத்​தும் மையப்​புள்​ளி​யாக திகழ்​வ​தாக​வும் காட்​சிகள் சித்​தரிக்​கப்​பட்​டுள்​ளன.

நீதித்​துறை​யில் ஊழல் இல்லை என்று யாரும் இங்கு மறுக்க முடி​யாது. ஊழல் நீதிப​தி​கள் நேற்​றும் இருந்​தார்​கள். இன்​றும் இருக்​கிறார்​கள். அதே​போல், நீதிப​தி​களை புனிதர்​களாகச் சித்​தரிக்க வேண்​டிய அவசி​ய​மும் இல்​லை.

நாட்​டில் உள்ள 20 சதவீத நீதிப​தி​கள் ஊழல்​வா​தி​கள் என்​பதை உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி பருச்சா கேரளா​வில் நடை​பெற்ற ஒரு சட்ட கருத்​தரங்​கில் வெளிப்​படை​யாகவே தெரி​வித்​துள்​ளார்.

மும்பை உயர் நீதி​மன்​றம் தொடர்​பான ஒரு வழக்​கில், ஊழல் என்​னும் புற்​று​நோய் செல்​கள் நீதித்​துறை​யின் உயிர் நாடிகளுக்​குள் தொடர்ந்து ஊடுருவி வரு​வ​தாக உச்ச நீதி​மன்​ற​மும் கருத்து தெரி​வித்​துள்​ளது.

நீதித்​துறை அந்த அபாயகர​மான செல்​களை அறுவை சிகிச்​சை​யின் மூலம் வேரோடு களைய வேண்​டும் என்​றும், சீர்​திருத்த நடவடிக்​கைகள் மூல​மாக நீதித்​துறை சுயபரிசோதனை செய்து கொள்​ள வேண்​டிய அவசி​யம் குறித்​தும் உச்ச நீதி​மன்​றம் அந்த தீ்ர்ப்​பில் எடுத்​துரைத்​துள்​ளது.

வழக்​கறிஞர்​கள் சிலர் ஊழல்​ வா​தி​களு​டன் தொடர்பு கொள்​ளாமல் நீதித்​துறை​யில் ஊழல் நடை​பெற வாய்ப்பு கிடை​யாது. நீதித்​துறை​யில் நடை​பெறும் ஊழல் நிகழ்​வு​களை நாங்​களும் அறிவோம். அதே​நேரம் அந்த கூற்றை முழு​மை​யாக ஆதரிக்க மாட்​டோம்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் முழு நீதிப​தி​கள் அமர்வு அவ்​வப்​போது இது​போன்ற கருப்பு ஆடு​களை களை​யெடுத்​துக் கொண்​டு​தான் இருக்​கிறது. ‘கருப்​பு’ திரைப்​படத்​தில் வரும் காட்​சிகள் மிகைப்​படுத்தி எடுக்​கப்​பட்​டுள்ளன என்​பது உண்​மை​தான் என்​றாலும், அதை முழு​வது​மாக மறுக்க முடிய​வில்​லை.

கருத்து சுதந்​திரத்தை வெளிப்​படுத்​தும் சுதந்​திரம், படைப்​பாளி​யான திரைப்பட கலைஞர்​களுக்​கும் பொருந்​தும். தனது அதீத கற்​பனை​யால் அரசி​யல் ரீதி​யாக கருத்து சித்​திரம் வெளி​யிடும் ஒரு கார்ட்​டூனிஸ்​டுக்கு என்ன பரந்த உரிமை உள்​ளதோ அதே உரிமை திரைப்​படக் கலைஞர்​களுக்​கும் உள்​ளது.

‘கருப்​பு’ திரைப்​படத்​துக்கு தணிக்கை வாரியமே சான்று அளித்​திருக்​கும்​போது, நீதி​மன்​றம் அதன் கருத்தை மாற்​றியமைக்க முடி​யாது. நாம் இப்​போது சமூக ஊடகங்​களின் யுகத்​தில் இருக்​கிறோம். யார் வேண்​டுமென்​றாலும் எதை​யும் சொல்லி எளி​தாக தப்​பி​விடலாம். கூற்று கொஞ்​சம் கொடூர​மான​தாக இருந்​தா​லும் அதை புறக்​கணித்து நீதித்​துறை​யின் பயணம் முன்​னோக்​கிச் செல்ல வேண்​டும்.

இந்​தப் படத்​தில் ஏழுகிணறு நீதி​மன்​றம் என கற்​பனை​யாக சித்​தரிக்​கப்​பட்டு அங்கு ஊழல் நடக்​கிறது என படத்​தில் காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளதேயன்​றி, ஒட்​டுமொத்த நீதித்​துறையை​யும் அந்​தப்​படம் கேள்விக்​குறி​யாக்​க​வில்​லை.

மேலும் ஏழுகிணறு நீதி​மன்​றம் என்ற பெயரில் சென்​னை​யில் எந்த நீதி​மன்​ற​மும் இல்லை என்​ப​தால் இந்த வழக்​கில் நீதி​மன்ற அவம​திப்பு இருப்​ப​தாகக் கருதி படத்​தின் இயக்​குநர் மீதும், படத்​தில் நடித்த நடிகர்​கள் மீதும் எந்த நடவடிக்​கை​யும்​ எடுக்​க முடி​யாது. இவ்​வாறு உத்​தர​விட்​டு வழக்​கை தள்​ளு​படி செய்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT